இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 மே, 2014

நட்பு அணுக்கவிதைகள் ....!!!

நண்பா ..
நீ  இன்னும் என் நினைவோடு
மூச்சு விடுகிறாய் அதுதான்
நான் உயிரோடு இருக்கிறேன்
+
+
கே இனியவன்
நட்பு  அணுக்கவிதைகள் ....!!!

நட்பு அணுக்கவிதைகள் ....!!!

என் ...
இறந்த இதயத்தை தூக்கும் ....
தகுதி உடைய இதயம் ...
என் நண்பன் தான் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு  அணுக்கவிதைகள் ....!!!

நட்பு அணுக்கவிதைகள் ....!!!

என் ...
இறந்த இதயத்தை தூக்கும் ....
தகுதி உடைய இதயம் ...
என் நண்பன் தான் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு  அணுக்கவிதைகள் ....!!!

வியாழன், 29 மே, 2014

உன் கண்ணீர் மழையில் ..?

உன் கண்ணீர் மழையில் 
நனையாமல் இருக்க - என் 
நினைவு குடையை விரிக்கிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

உன்னை யாரும் ..?

உன்னை யாரும் கடத்த 
துன்புறுத்த முடியாது -என் 
இதயத்துக்குள் இருப்பதால் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

என் இதயத்தை ...!!!

இழக்க கூடாத ஒன்றையே 
இழந்து விட்டேன் உன்னிடம் 
என் இதயத்தை ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

அணுக்கவிதை எழுதுகிறேன்

உன்னை அணு அணுவாக 
காதலிக்கிறேன் -உனக்கு 
அணுக்கவிதை எழுதுகிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

பூச்சியமாக்கி விடாதே ....!!!

நானும் ஒரு கோடீஸ்வரன் 
உன் நினைவுகள் 
கோடிக்கணக்கில் சேமித்து 
வைத்திருக்கிறேன் ...!!!

சேமிப்பு குறைந்தால் 
நம் காதல் முதலீடு 
குறைந்து விடும் உயிரே ...!!!
வாழ்க்கையையே 
பூச்சியமாக்கி விடாதே ....!!!
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

காதல் செய்வோம் .....!!!

நீ தந்த நினைவு பரிசு 
என் வீடு முழுதும் 
நிறைந்திருக்க - நீ தந்த 
நினைவு என் இதயம் 
முழுவது நிறைந்து 
இருக்கிறது - நீ மட்டும் 
எங்கே சென்றாய் உயிரே 
வா காதலால் காதல் 
செய்வோம் .....!!!
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

கண்ணீர் உணருதடி...!!!

மின்னுகின்ற போதெல்லாம் 
உன் கண் என் மீது பட்ட 
வீச்சு உணருதடி ....!!! 

காற்று 
வீசுகின்ற போதெல்லாம் 
உயிரே நீ என் அருகில் இருந்து 
என் மீது விட்ட மூச்சு காற்று 
உணருதடி ....!!! 

மழை பொலிகின்ற 
போதெல்லாம் உயிரே 
உன்னை நினைக்கும் போது 
வரும் ஆனந்த கண்ணீர் 
உணருதடி...!!!
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

நிறுத்தி விடாதே ...!!!

என் 
இரவுகளை தொலைத்தவள் 
என் கனவுகளை கலைத்தவள்
இரவுகளை ஆக்கிரமித்து 
தன் கனவுகளை மட்டும் 
தந்தவள் - நீ ....!!!

இறைவா 
இன்று தூக்கத்தை தொலைத்து 
விடாதே இன்று அவள் கனவில் 
வருவதை நிறுத்தி விடாதே ...!!!
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

நம் காதல்

நம் காதல்
நறு மணம் வீசும்
மல்லிகையாகவும்
நிலைத்திருப்பதில்
வாடா மல்லிகையாகவும்
இருக்கிறது உயிரே ....!!!

ஒவ்வொரு நொடியும் சுவாசிக்க .....!!!

உன் 
நினைவுகளை கவிதையாய் 
எழுதினேன் தினமும் வாசிக்க
உன் 
நினைவுகளை ஓவியமாக 
வரைந்தேன் தினமும் ரசிக்க 
உன் 
நினைவுகளை இதயத்தில் 
சுமக்கிறேன் ஒவ்வொரு 
நொடியும் சுவாசிக்க .....!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

ஞாயிறு, 25 மே, 2014

காதல் முத்து

என் கண்ணுக்குள் நீயும்
உன் கண்ணுக்குள் நானும்
விழுந்து விட்டோம்
ஆனந்த கண்ணீருடன்
வளர்கிறது காதல் முத்து

ஒரு சுயநலவாதி

என் இதயம்
ஒரு சுயநலவாதி
நீ வந்தவுடன் உன்னை
என் இதய அறைக்குள்
பூட்டி வைத்து விடுகிறது !!!

உன்னிடம் காணவில்லை

என்னதான் என்றாலும்
காதலில் என்னைவிட நீ
கொஞ்சாம் குறைவுதான்
எனக்கு இருக்கும் துடிப்பு
உன்னிடம் காணவில்லை

காதல் செய்ய ....!!!

எனக்கு
உன் முக அழகு
வேண்டாம் உன் கண்
அழகு போதும்

காலமெல்லாம்
காதல் செய்ய ....!!!

அனுமதி தா

உன் உதட்டில் உள்ள
என் கவிதை வரிகளை
வாசிக்க முடியாமல்
தவிக்கிறேன் தயவு செய்து
ஒரு முத்தத்துக்கு 

அனுமதி தா

அற்புத சக்தி ....!!!

தொலைதூரத்தில்
இருந்து நீதரும்
தொலைபேசி முத்தம் தான்
தொலைந்து போன என்
இன்பத்தை மீட்டெடுக்கும்
அற்புத சக்தி ....!!!

சனி, 24 மே, 2014

முத்தான காதல் கவிதைகள்

முத்தான காதல் கவிதைகள்
----------------------------------

என் கவிதை
கற்பனை இல்லை
என்னவள் -ஒரு
கண்ணை சுருக்கி
மறு கண்ணால்
கண்ணடித்த வரிகள் ...!!!

--------------------

தன் தாவணியை
கடைக்கண்ணால்
சரிபார்ப்பதுபோல்
என்னை அடிக்கடி
திரும்பி பார்க்கும்
ரகசியம் -காதல்
ரகசியங்களில் ஒன்று ...!!!

--------------------
தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!

சிறு க(வி)தை

கடற்கரை எங்கும் சனக்கூட்டம் ....!!!

மன ஆறுதலுக்காய் தினமும் சிறிது நேரம் என் வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரையில் என் பொழுதை கடத்துவேன் . அந்த அலையில் ஓசையும் காற்றின் கீதமும் என்னை மெய் சிலுக்க செய்த நாட்கள் எண்ணில் அடங்காது .....!!!

" அன்னையின் 
தாலாட்டுக்கு நிகரானது "
"கடல் அன்னையின் தாலாட்டு "
அன்னையில் தாலாட்டில் 
ஒரு குழந்தை தூங்கும் -கடல் 
அன்னையில் தாலாட்டில் 
ஊர் குழந்தைகள் 
எல்லாம் தூங்கும் "


அந்த தாயின் அரவணைப்புடன் கடற்கரையில் 
மெதுவாக நடந்து சென்றேன் . திடீரென நிகழ்ந்தது அந்த சம்பவம் ....!!!

ஒரு பத்து  வயது மதிக்க தக்க சிறுவனை பெரிய அலை உள் இழுத்து சென்றது ..கடற்கரை ஓரத்தில் 
நின்றவர்கல் எல்லோரும் கூச்சலிட்டனர் ...!!!
சிறுவனை காணவில்லை .தாய் தலையில் கடற்கரை மண்ணை தூவியபடி ஓலமிட்டாள் 
அடுத்த நொடியில் மற்ற அலையுடன்   வந்து சேர்ந்தான் சிறுவன் ...!!!

தாய் ஓடிப்போய் குழந்தையை கட்டி தழுவி முத்தமிட்டாள்..சிறுவனின் முகத்தில் ஒரு பதட்டமும் இல்லை ..!!! ஆச்சரியம் அதிர்ந்து போனேன் நானும் ....!!! சற்று நேரம் கடந்ததும்
அந்த சிறுவனிடம் கேட்டேன் ...?

என் தம்பி உனக்கு பயமே இல்லையாடா ..?

சும்மா போங்க " மாமா " கடலுக்குள் எவ்வளவு அழகான இடம் இருக்குது தெரியுமா ..? இதை பார்க்க என் கடல் தாய் கொடுத்த அதிஸ்ரம் தான் இது ..என்று தன நான் நினைக்கிறன் மாமா என்று 
எந்த சலனமும் இல்லாமல் கூறிவிட்டு தாயிடம் 
ஓடிவிட்டான் ...!!!

தலையை குனிந்தபடி கடற்கரையை பார்த்தபடி 
வந்தேன் .அங்கு சிறு நண்டுகள் செய்யும் குறும்பை பார்த்தேன் . அலை வரும் போது தமது பொந்துக்குள் ஓடி மறைவதும் அலை சென்றபின் 
மீண்டும் வருவதும் அவற்றின் வாழ்க்கையாக இருந்தது ....!!!

சிறு நண்டும் ...சிறுவனும் ..எனக்கு உணர்த்தியது ஒன்துதான் ...!!!!!

"அலைபோல் 
வரும் பிரச்சனையை"
"எதிர் கொண்டுபார்"  
"ஓடி மறையாதே "
"நீ பிரச்சனை என்று 
நினைப்பவை "
இன்பத்தை தரும் "
அதுவே சிறு நண்டுபோல்..
"இன்ப வாழ்கையாகவும் 
மாறிவிடும் "

வாழ்கையில் பிரச்சனைகள் அலைகள் அல்ல ...
அதை எதிர்கொள்ள முடியாமல் ஓடி மறையும் 
நம் எண்ணம் தான் பாரிய அலைகள் ...!!!

கதையும் கவிதையும் முற்றும் 

யாவும் கற்பனையே 
கே இனியவன்