இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 அக்டோபர், 2013

ஓடுகின்ற பேரூந்திலே

ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி ஏறினாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை
நினைத்தாயா...?
ஈரேழு வயதுவரை
பலவகை கனவுடன்
சுமர்ந்திருந்த -உறவுகளை
நினைத்தாயா ....?
ஈரேழு நிமிடத்தில்
இழந்து விட்டோம்
அத்தனையையும் மகனே ....!!!

                                         சமுதாயகவிதை
www.iniyavankavithai.blogspot.com