இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

துடிக்கவும் வைக்கணும்.....!!!

இதயத்தின் வேலை .....
துடிப்பது மட்டுமல்ல....
துடிக்கவும் வைக்கணும்.....!!!

எவ்வளவு தான் ....
உன்னை சுற்றி வந்தாலும்....
நிமிட முள் போல்......
நீதான் முந்திக்கொண்டு
செல்கிறாய் என்னை ......
கவனிக்காமல்.......!!!

இதயத்துக்குள்.....
காதல் யாரையும் கேட்டு.....
வருவதில்லை......
அப்புறம் எதற்கு......
போகும்போது
கவலைப்படுகிறீர்கள் ......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1049
கவிப்புயல் இனியவன்

வியாழன், 29 செப்டம்பர், 2016

உலகில் யாரும் இல்லை .....!!!

மனவேறுபாடை .....
தோன்றும் போதே ....
தடுக்கும் ஆற்றல் .....
எவனுக்கு வருகிறதோ ....?
அவனை வெல்ல இந்த .....
உலகில் யாரும் இல்லை .....!!!

மன கசப்பை நீக்கியவன் .....
முன் அனைவரும் தோல்வியை .....
சந்தித்தே ஆகவேண்டும் .....!!!
+
குறள் 855
+
இகல்
+
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 75
+

திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 74

துன்பத்தில் கொடிய ....
துன்பம் மனத்துன்பம் .....
மனதை கொல்லும்....
மகா துன்பம் .......!!!

மனத்துன்பத்தை ......
நீக்கியவன் என்னவோ .......
அதுவே அவனுக்கு ....
இன்பத்தில் பெரும் .....
இன்பமாகும் .....!!!

+
குறள் 854
+
இகல்
+
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 74
+
கவிப்புயல் இனியவன்

கொட்டி கிடைக்கும் புகழ் ........!!!


நீக்கு நீக்கு ....
மனவேறுபாடு ......
நீக்கு .........
நீக்கவேண்டியதில் .....
இதுவே முதன்மை ....!!!

நீக்கிய மனவேறுபாடை ......
நீக்கிய கணமே ........
கொட்டி கிடைக்கும் .....
புகழ் ........!!!

+
குறள் 853
+
இகல்
+
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 73
+
கவிப்புயல் இனியவன்

நட்பின் சிறந்த குணம் ....!!!

நண்பா .....
நீ எனக்கு எத்தனை .....
வலிகளை துன்பங்களை ....
தந்தாலும் - நீ எந்தன் ....
நண்பனே ......!!!

இன்பத்தை தருபவன் .....
மட்டுமே நண்பன் இல்லை .....
துன்பத்தையும் தருவான் .....
சகித்து கொண்டு அவன் ....
நட்பையும் தொடர்வதே ....
நட்பின் சிறந்த குணம் ....!!!

+
குறள் 852
+
இகல்
+
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 72
+
கவிப்புயல் இனியவன் 

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

"மனவேறுபாடு "
----------------------
மனிதனோடு ......
மட்டுமல்ல பகை ......
உயிரினங்கள் .....
எல்லாவற்றோடும் பகை .....!!!

எல்லாவற்றோடும் ....
ஒப்பிட்டு ,வேறுபடுத்தி ....
தன்னை தானே குறைத்து ....
மதிப்பிட்டு வாழ்வதே .....
"மனவேறுபாடு " என்பர் ....!!!
+
குறள் 851
+
இகல்
+
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 71

புதன், 28 செப்டம்பர், 2016

நட்பு கவிதை

இறப்பது எளிதே
எனக்கு...!!!
நண்பா உன்னை ..
மறப்பதைக் காட்டிலும்...!!!

&^&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

----

அடி, முடி தேடினாலும்.....
அகராதியை புரட்டினாலும்.....
முழுமையான அர்த்தம் .....
புரியாது ......
நட்பின் ஆழம் ............!!!

&^&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

முள்ளில் மலரும் பூக்கள்

நீயும் காதல்......
சிறகு கொண்ட பறவை.....
பருந்தல்ல......
என்னோடு பறந்து வர.....
தயங்குகிறாய்.....!!!

காதலில்
அதிகமாக எரியாதே....
சாம்பலாகி விடுவாய்
உலகம் ஊதியே மறைத்து....
விடும்............!!!

காதலை ....
உண் - உன் காதல்.....
நம் காதல் ஆகிவிடும்....!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1048
கவிப்புயல் இனியவன்

அணைந்தே விட்டாயே......!!!!

காதலில் நான் ......
மூலவேர் - நீயோ.....
இலை ஒரு நாள்.....
உதிர்ந்து விழுவாய்........!!!

நீ
பனிக்கட்டியில் உருவாகிய.....
கப்பல் தெரியாமல் உன்னில்......
பயணம் செய்துவிட்டேன்.......!!!

என் காதல் தீபமே........
உன்னை அணைத்தேன்........
அணைந்தே விட்டாயே......!!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

உன் செயல்கள் சிற்பம் ......!!!

அத்தனை நட்புகளும் ......
ஏதோ ஒரு நலன் தான் ......
உன் நட்பை எப்படி .....
வர்ணிப்பது .........?

நீ எனக்கு தாயா ......?
நீ என் தலைவியா ......?
நீ என் வழி நடத்துனரா .....?
நீ என் இறைவியா .....?

மாஜங்கள் காட்டும் ......
மாஜ உருவ கருவி -நீ
உருவம் தான் மாஜம்.......
உன் செயல்கள் சிற்பம் ......!!!

ஒரு அடைபட்ட இதயத்தில் .....
வாழ்ந்த என்னை .......
பறந்து திரியும் சிட்டு .....
குருவியாக்கியவள் -நீ
நீ என்னருகில் இருக்கும் ...
காலமெல்லாம் நான் ....
சுதந்திர பறவை ............!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

அழகு தமிழ் பேசும் அழகி நீ

அவன்
----------
அழகு தமிழ் பேசும் அழகி நீ
அலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ
அகங்காரம் கொண்ட அழகி நீ
அகட விகடமாய் பேசும் அழகி நீ
அகத்தில் முழு நிலா அழகி நீ

அகம் முழுதும் நிறைந்தவளே.....
அழகுக்கு மகுடமாய் இருப்பவளே.....
அகோரமாக்குதடி உன் நினைவுகள்.....
அக்கினியில் எரியுதடி என் இதயம்.....
அணைத்துவிடு காதல் கொண்டென்னை.......!!!

 அவள்
---------
அச்சப்படாதே அச்சுதனே..........
அகம்பை யான் உனக்கேதான்.......
அகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை
அடர்த்தி கொண்ட நம் காதல்........
அகிலம் போற்றும் காதலடா..........!!!

அடைமழைபோல் இன்பம் தருவேன்.......
அந்தகாரத்தில் இன்பம் தருவேன்......
அபலை என்னை ஏமாற்றிவிடாதே......
அற்ப ஆயுளாய் ஆக்கிவிடாதே....
அன்பரசனே நீ என் இன்பரசன்.........!!!

&^&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 26 செப்டம்பர், 2016

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் 04

முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் .....!!!
கானா கவிதை
காதலின் இன்பமும் துன்பமும் ...!!!
காதல் அணுக்கவிதைகள்..!!!
காதல் சிதறல்கள்கவிப்புயல்
இனியவன் மூன்று வரிக்கவிதை

போராட்ட கவிதை
கே இனியவனின் பல்வகை கவிதைகள்
ஒரு தலைக்காதல் கவிதை
கே இனியவன் ஹைக்கூகள்
கே இனிவனின் குமுறல்

கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
கே இனியவனின் புதுக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் 03

சொல்லாடல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
 காதல் பூ போன்றது
 இன்றைய sms கவிதை

கே இனியவன் நட்பு கவிதை
அகராதி என் காதல் அகராதி
 முயற்சிசெய் - பயிற்சிசெய்
 என் கவிதை
கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்

 தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
ஒரு சொல் கவிதைகள்
 எப்போதும் நீ - எல்லாம் நீ
 காதல் மன முறிவு கவிதைகள்
 குழந்தைகள் கவிதைகள்
நீ எதை செய்தாலும் அது காதல்
காதல் கவிதையும் தத்துவமும்

 முகநூல் காதலருக்காக கே இனியவன்
உணவு உணர்வை பாதிக்கும் ...!!!
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
 கே இனியவன் ஹைக்கூகள்
நட்பு மலர்களே மலருங்கள்
 காதலில் எதுவும் நடக்கும்
கேள்வி..? பதில்..!!! கவிதை

கல்லறை இதயத்தின் கதறல்
 கவிதையால் அடிக்கிறேன் ......!!!
 கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை
 கவிப்புயல் இனியவன் கவிதைகள்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

குடும்ப கவிதைகள்
படம் பார்த்தேன் கவிதை வந்தது
 உயிரே உனக்காக சிலவரிகள்
கவிதையில் பலதும் பத்தும்
  கே இனியவன் தத்துவ கவிதை
இதயத்தின் அழகே காதலின் அழகு
உலகில் வாழ்ந்து பயனில்லை
கைபேசி என் உயிர் பேசி ...!!!

நட்பிலும் காதலிலும் ...!!!
வெற்றியின் பெறு பேறாகும்....!!!
உண்மையை ஊமையாக்காதே ..
நீ இங்கே - நான் எங்கே ...?
 ஏமாளியாக இருக்கவில்லை....!!!
 ஒருவரியில் காதல்கவிதை வரி
தாயே என்னை மன்னித்துவிடு
மைக்ரோ கவிதைகள்

 காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
மரணம் -கவிதை
 தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் 02

 நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 
பெண்ணியம் கவிதை
எழுந்திரு போராடு வெற்றி 
உருக்கமான காதல் கவிதைகள் 
முள்ளும் ஒரு நாள் மலரும்
 என் காதல் பைங்கிளியே
கே இனியவன் ஹைபுன்
ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ

என்னவளின் காதல் டயறியிலிருந்து
அர்த்தமுள்ள கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் 
ஒரு வார்த்தை கவிதைகள் 
கவிதையால் காதல் செய்கிறேன்
என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .
நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது 
பழமொன்ரியு 

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 
 கனவாய் கலைந்த காதல் 
 பூக்களால் காதல் செய்கிறேன் 
மின் மினிக் கவிதைகள் 
எனக்குள் இருவர் 
சிந்தித்து சிரிக்க சென்ரியூ 
 உடலும் நீயே...! உயிரும் நீயே..
தாயே.. அம்மா... அன்னையே ..
 வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை 

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் 
 கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
கவிப்புயல் இனியவன் சென்ரியூ 
கவிப்புயல் இனியவன் காதல் கவிதை 
 இனிய தமிழ் கவிதைகள் 
 காதல் " இரு " வாசகங்கள்
 நட்பென்றால் இதுதான் நண்பா
 கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை 
காதல், நட்பு , கவிதைகள் 
காதலை காயப்படுத்தாதே 
 காதல் துளிக்கவிதைகள்

கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
பொங்கல் சிறப்பு கவிதைகள் 
திருக்குறள் வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன் ஹைபுன்
 முயன்றால் முடியாதென்றொன்றில்லை 
கவிப்புயலின் வசனக்கவிதைகள்
காதல் ஒன்று கவிதை இரண்டு 

 காட்சிப்பிழைகள் 
கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்
 கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள் 
பேச்சுத்தமிழ் கவிதைகள்
அடுக்கு தொடர் கவிதைகள் 

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள்

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 
தேனிலும் இனியது காதலே 
அகராதி நீ என் அகராதி 
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கதைக்கும் கவிதைக்கும் காதல் 
கவிப்புயலின் பல இரசனை கவிதை
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 
என்னவளே என் கவிதை 
நீ காதலியில்லை என் தோழி 

என் பிரியமான மகராசி
கடந்த காதல் - குறுங்கவிதை 
ஒருவரியில் கவிதை வரி
சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
இவை எனக்கு சிறந்தவை 
பஞ்ச வர்ண கவிதைகள் 
திருமண வாழ்த்து மடல்கள் 
முதல் காதல் அழிவதில்லை 
கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
மனைவிக்கு ஒரு கவிதை 
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கவிப்புயல் வெண்பா கவிதை 
கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 
நினைத்து பார்த்தால் வலிக்கிறது 
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை 
சமுதாய கஸல் கவிதை

உனக்காகவே உயிர் வாழ்கிறேன் 
கடல் வழிக்கால்வாய் 
என் காதல் நேற்றும் இன்றும் ....!!!
விழிகளால் வலிதந்தாய் 
ஒரு வழிப்போக்கனின் கவிதை 
K இனியவன் நகைசுவை கவிதைகள்
இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
காலமெல்லாம் காதலிப்பேன்

சுகம் தேடும் சுயம் 
காதல் சோகக்கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை 
காதல் எஸ் எம் எஸ் 
காதல் தோல்விக்கவிதைகள்
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
தேர்தல் 
உன்னை விட்டால் எதுவுமில்லை 
அதிசயக்குழந்தை 

கவிதை காதலின் தூதுவன் 
விடுகதைக்கவிதைகள் 
எனக்குள் காதல் மழை 
காதல் சோகக்கவிதை 
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஒரு நிமிட உலகம் 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

என்னவளின் நினைவை ......!!!

மனதோடு மட்டுமல்ல.,.,
மரணத்தோடும் வைத்திருப்பேன்
அவள் என்னை பிரிந்தாலும்,
என் உயிர் பிரியும் வரை .......
என்னவளின் நினைவை ......!!!

எனக்குள் இருக்கும்...
அவளை  தேடி பார்த்தால்...
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள்......
கலந்திருக்கிறாள் ....................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

உன் காதல் நினைவுகள்

நான் உனக்காக ....
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

நினைவுகளை நினைத்து ஏங்குவதா…….?

பிரிந்து சென்ற உன்னை
நினைத்து கலங்குவதா…..?
பிரியாத உன் நினைவுகளை
நினைத்து ஏங்குவதா…….?

இதயத்தில் வசிப்பவளே...
நீ சந்தோசமாக இருக்கும் .....
தருணம் என்னை அறியாமல் ....
சிரிக்கிறேன் .........
நீ சோகமாய் இருக்கும் ....
போது என்னை அறியாமல் ....
அழுகிறேன் ......!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

ஒரு வார்த்தைக்காக.....!!!

ஒரு நாள் உன்னை ......
காணவில்லை ..
என்றால் ஒரு வருடம்....
காணாததுபோல் ......
இருக்கிறது...
நீயோ ஒருசொல்லை...
மௌனமாக .........
வைத்திருக்கிறாய் .....!

பிறவி முழுவதும்....
வேண்டுமானாலும் ....
காத்திருக்கிறேன்...
உனக்காக....
என்னை நீ விரும்புகிறேன்...
என்று சொல்லும்
ஒரு வார்த்தைக்காக.....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

சனி, 24 செப்டம்பர், 2016

அகராதி நீ என் அகராதி

அகராதி நீ என் அகராதி .....
அகரம் முதல் அந்தம் வரை.....
அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ.....
அழகு தமிழ் வார்த்தைகளை......
அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!!

அகோராத்திரமும் உன்னை நினைத்து.....
அல்லோலகல்லோலப்படுகிறேன்......
அணைக்கவும் முடியவில்லை.......
அகலவும் முடியவில்லை ........
அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......?
அழகு தேவதையே அகத்தரசியே

&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
மேலும் தொடரும்

என் விழி கொண்டு ....!!!

உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!
டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

கதைக்கும் கவிதைக்கும் காதல்

அவன் -இனிமை
--------
எப்படியாவது அவளின் பெயரை கண்டறிய துடித்தான் .இனிமை தண்ணி குடிக்க போவதுபோல் எல்லா இடத்திலும் அவளை தேடினான் . அவள் வேண்டுமென்றே கதவு திரைக்குப்பின்னால் நின்றாள் .தேடிப்பார்க்க இனிமை
அவளை காணாமல் சுவாதிடத்துடன் .வரும்போது . வின்னியாவின் அம்மா குரல் ஒலித்தது .......!!!

வின்னியா ...வின்னியா ....எங்கம்மா இருக்கிற .....? வின்னி வின்னி ....என்று
கூப்பிட்டபோது  திரைக்குப்பின்னால் இருந்து வந்தாள் வின்னியா ......

ஓ பெயர் வின்னியாவா ஓகே ஓகே என்று அவள் காதில் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு தெரு முனைக்கு வந்தான் நண்பர்களுடன் தெருவை அலங்காரம் செய்வதற்கு ......இன்னும் விடிவதற்கு ஒரு சில மணி நேரமே இருந்தது . ஒரு சின்ன தூக்கம் கூட ஒருவரும் தூங்கவில்லை . விடிந்தால்  கல்யாணம் .

தூரத்தில் இருந்து வின்னியா சைகை கொடுத்தாள். தூங்குங்க என்று
பதில் சொல்ல முடியாமல் இனிமை தானும் சைகையால் நீ முதல் தூங்கு
என்பதுபோல் சொன்னான் .

தலையை அசைத்தபடி தூங்க சென்றாள் - வின்னியா

அவள் - வின்னியா
------
தூக்கம் என்பது கண் ......
மூடுவது மட்டுமல்ல .....
மனமும் மூடவேண்டும் .....
இத்தனை நினைவுகளை ....
தந்து விட்டு தூங்க சொல்லும் ....
அவன்தூங்கி விடுவானா .......?

நினைவுகளால் வெந்து .....
துடிக்கிறேன் விடிய இருக்கும் ....
சிலமணி நேரம் கூட .....
ஜென்மமாய் இருக்குதடா .....
விடிந்து உன்னை பார்ப்பது.....
எனக்கு சூரிய உதயம் ......!!!

&
கதைக்கும் கவிதைக்கும் காதல்
கதையும் கவிதையும் 03
கவிப்புயல் இனியவன்

இன்னும்தொடரும் 

கவிப்புயல் இனியவன் கிறுக்கல்கள் 

உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

^^^

உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?

உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

கவலையில்லை ....!!!

கடற்கரையில் ......
பேசியதுபோல் ஆகிவிடாது ....
நம் காதல் ......
தொட்டு தொட்டு .....
சென்று விடுகிறாய் .......!!!

எப்படியும் வாழலாம் .....
என்றால் உன்னை .....
காதலிக்க தேவையில்லை ......
உன்னை காதலித்ததால் .....
இப்படியும் வாழுகிறேன் ....
என்பதிலும் கவலையில்லை ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!

இதயம் இருட்டாக .....
இருந்தாலும் காதல் .....
வெளிச்சமாக்கி .....
விடுகிறது ........!!!

இருட்டறையில்.......
தவிக்கும் குழந்தை ....
வீறிட்டு அழுவதுபோல்......
நானும் அழுகிறேன் .....
இதய விளக்கை .....
நூற்றத்துக்காக ......!!!

துடித்து கொண்டு ....
இருந்த என் இதயத்தை ....
துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!

&
 ^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

வியாழன், 22 செப்டம்பர், 2016

தத்துவ கவிதை

நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை 

ஏங்க வைக்கிறாய் ...!

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள் 

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!

இதயத்தை சிதைப்பது .....
எப்படியென்பதை .....
உன்னிடம் ....
கற்று கொள்ளப்போகிறேன் ......!!!
காதலர் தினத்தை .....
கொண்டாடும் காதலர்களே ......
காதல் தோல்விக்கு .....
எப்போது நாள் .....?
உன்னிடம் காதலை .....
சொல்லாமல் விட்டிருந்தால்.....
சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!
&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை - 1046
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
காதல் கவி நேசன்
இனியவன்

அழகழகான முகமூடி ....

நீ
யாருக்காகவோ ....
பிறந்தவள் என்றாலும் .....
நான் ....
உனக்காக பிறந்தவள் ....!!!

காதல் தோல்வி ....
கண்டவர்களின் .....
பட்டியலில் என் ...
பெயர்தான் முதல் .....
நீயும் தப்பமுடியாது .....!!!

காதலுக்கு ....
அழகழகான முகமூடி ....
விற்பவள்  - நீ ........!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
காதல் கவி நேசன்
இனியவன் 

திங்கள், 19 செப்டம்பர், 2016

தமிழோடு விளையாடு 02

வந்தேன்.....என்னை....... தந்தேன்...
நினைத்தேன்.... என்னையே......மறந்தேன் ...
ருசித்தேன்...... மொழியை- சுவைத்தேன் ..
இழந்தேன்..... எனை...... ஒப்படைத்தேன் ..
காதலித்தேன் ....உயிராக .....நேசித்தேன் ..
சுவாசித்தேன்....மூச்சாக ...வாழ்ந்தேன் ...
பார்த்தேன்- நீ வரவில்லை -அழுதேன்

&
தமிழோடு விளையாடு 02
கவிப்புயல் இனியவன்

தமிழோடு விளையாடு

நீ படும் .......................அவமானம்
உனக்கு அதுதான் ...வருமானம்
உறுதியாக எடு .........தீர்மானம்
வெற்றி என்பது ........அனுமானம்
வாழ்க்கை என்பது ..பிரமானம்
முடிவில் வாழ்வது.....தன்மானம்

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்

என்னவளே என் கவிதை 42

நீ 
விடும் மூச்சு காற்றில் ....
என் இதயம் என்னும் .....
காதல் காற்றாடி பறக்கிறது ......!!!

எப்போது உன் காதல் ....
மூச்சை நிறுத்துகிறாயோ .....
அப்போது காற்றில் அறுந்த.....
காற்றாடி எங்கு போய் .....
விழும் என்று யாருக்கும் ....
தெரியாததுபோல் நானும் .....!!!

&
என்னவளே என் கவிதை 42
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

என்னவளே என் கவிதை 41

நீ
தலைகுனிந்து .....
போகும் போதெல்லாம் .....
என் இதயம் வெடித்து ....
போகிறது ........!!!

ஒருமுறை என்னை .....
நிமிர்ந்து பார் ......
என்னை சுற்றி எத்தனை .....
பட்டாம் பூசிகள் .....
உன் நினைவோடு ......
பறப்பதை .....................!!!

&
என்னவளே என் கவிதை 41
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

நீ காதலியில்லை என்தோழி 04

தனியாக இருக்கவேண்டும் ......
மௌனமாக இருக்கவேண்டும் .......
சற்று தொலைவில் நீ இருக்கணும் .....
ஓரக்கண்ணால் பார்க்கணும் ......
நீயும் அப்படியே செய்யணும் .......!!!

சில்லென்று குளிர்காற்று .....
இடையிடையே சிறு துளிகள் ......
மெல்லிய மண் குத்த ........
ஆதவன் மறையும் நேரம் ......
நீ தனியே நான் தனியே .....
பிரிந்து செல்லவேண்டும் .............!!!

முடிந்தால் இந்த இடத்துக்கு .....
கூட்டி செல் என்றாள் நண்பி ........!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை 04
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

வெட்கப்பட்டு உதிர்கின்றன ....

உன் உடம்பில் ......
முடிகள் சிலுக்கும் போது.....
வெட்கப்பட்டு உதிர்கின்றன ....
இலைகள் .......!!!

நீ
சிரிக்கும் போது ....
மறைந்து விடுகிறது .....
நட்ஷத்திரங்கள் ............!!!

உன்
இரட்டை சடையில் .....
தேரே இழுக்கலாம் ......
ஒரு உதவி செய் .....
உன் கை குட்டையாக ....
ஏற்றுக்கொள் அப்போதாவது .....
உன்னால் கசக்கப்படுவேன் .....!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
       காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

வியாழன், 15 செப்டம்பர், 2016

நீ காதலியில்லை என்தோழி 03

நெஞ்சில் அவளையும் .....
உடலில்  பொதியையும்.....
சுமர்ந்து கொண்டு சென்றேன் ......
சுற்றுலா பயணமொன்று .......!!!

அவள் கொண்டுவந்த உணவு .....
நான் கொண்டு சென்ற உணவு .....
எதுவென்று தெரியாமல் ......
உண்டு களித்து பயணம் ......!!!

திடீரென தூறல் மழை ......
ஜன்னலை மூடினேன் ......
அவள் தடுத்தாள்.................
சிறு துளிமழை முகத்தல் ....
சிந்துவதில் ஒரு சுகம் .......
ரசித்த படியே பயணம் .......!!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை 03
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
      காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

என் பிரியமான மகராசி 10

பட்ட மரத்தில் ஊஞ்சல் .....
ஆடுகிறாள் .......
மரம் கூட துளிர்க்கிறது .......
முற்கள் மேல் நடக்கிறாள் ....
பூக்கள் ஆகிறது ..........!!!

உன் அழகை .....
நினைக்கும் போது....
இதயத்தில் ஊசி குத்துகிறது ......
நீ நேரில் வரும்போது .....
இதயம் ஈட்டியால் ......
குத்துகிறாய் .........!!!

நீ
தீப்பந்தத்துடன் திரியும் .....
அழகு மோகினி .......
நான் நீர் வீழ்ச்சி ......
நீ அணைந்துதான் ......
ஆகவேண்டும் ...................!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

என் பிரியமான மகராசி 09

உன்னை ....
இமயமலை சிகரம் ....
என்பேன் .....
உன் இமைகள் ....
சிகரமாய்
இருப்பதால் ......!!!

எனக்கு
நீ தொங்கு தோட்டம் .....
அழகான உறுப்புக்களை ....
நீ
சுமர்ந்து கொண்டு செல்வதால் ......

நீ
சிரித்தால் தென்றல் .....
முறைத்தால் புயல் .....
கோபித்தால் சுனாமி .....
நான் எல்லாவற்றாலும் .....
உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

நீ
என்னை காதல் செய்யும் ....
தினம் தான் எனக்கு .....
சுதந்திர தினம் ..................!!!

&
என் பிரியமான மகராசி 09
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

புதன், 14 செப்டம்பர், 2016

உன் முழு அழகையும் .....

நல்ல வேளை.......
ஆடை கண்டு பிடித்தார்கள் .....
மறைக்கப்பட்ட ஆடையில் .....
நீ இத்தனை அழகாய் .....
இருக்கிறாய் ..............!!!

உன் முழு அழகையும் .....
ரசிக்க நான் ஆதிவாசியாய் ......
பிறக்கவேண்டும் ....
அவர்களும் இப்போ ஆடை .....
அணிகிறார்கள் .............!!!

நீ 
சேலையில் வரும்போது .....
வானவில்லா ......?
அருவியா .............?
அசையும் வெண் முகிலா ...?

நீ கோபப்படும் போது .....
நீவிடும் வெளி மூச்சு ....
கரியமில வாயுவா ......?
கருகிவிடும் வாயுவா ......?


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 07

உன் அழகை எப்படி வரைவது ......?

இப்போதுதான் ......
புரிகிறது சாம்ராசியங்கள் .....
பெண்களால் கவிழ்த்துக்கு ....
காரணம் .......................!!!

எனக்கொரு அனுமதி  தா .....
உன் மூச்சாக வருவதற்கு .....
இதயத்தை எட்டி பார்த்து  விட்டு ......
வருவதற்கு .........!!!

உனக்கு காதல் வரும் போது.......
பாவம் ஆண்கள் தாடி யோடு .....
அலையப்போகிறார்கள் ........
என்னை தவிர யாரும் உன்னை .....
நெருங்க முடியாததால் ......!!!

வரைந்த ஓவியம் அழகுதான் .....
வளர்ந்துகொண்டே இருக்கும் .....
உன் அழகை எப்படி வரைவது ......?

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 06

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நீ காதலியில்லை என்தோழி 02

நீ
காதலியில்லை என்பதை ......
யாரும் நம்புவதாய் இல்லை .....
இத்தனை அழகியை யார் தான் .....
நம்புவார்கள் ..........???

உன்னோடு கைகோர்த்து ......
நடக்க ஆசைப்படுகிறேன் ......
நரிகள் உள்ள இருட்டு உலகில் .....
சற்று பயமாகவும் இருக்கிறது .....
இன்னும் நாம் நட்பாய் இருப்போம் .....
நிச்சயம் ஒருநாள் நிகழும் ......!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை 02
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

நீ காதலியில்லை என் தோழி

வா தோழியே ....
எல்லோரும் பொறாமை படும் ......
அளவுக்கு நட்பாய் இருப்போம் ......
இப்படியும் நட்பாக இருக்க .....
முடியுமா என்பதை ......
நிரூபிப்போம் .......!!!

கையில் முத்தமிட்டால்......
காதலியாகிவிடுவாள் .....
கை கொடுத்து  உறவுவந்தால்  .....
நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ 

நண்பனை காணாத வரை....!!!

கடவுள்
இல்லை என்றேன்
நண்பனை
காணாத வரை.....!!!

வாழ்க்கையே
இல்லை என்றேன்,
நண்பனை
காணாத வரை......!!!

உலகமே   பொய்
என்று நினைத்தேன்
நண்பனை காணாத வரை
காதல் தான் பெரிது .....
என நினைத்தேன்
நண்பனை காணாத வரை....!!!

கடந்த காதல் - குறுங்கவிதை

தூறலும் இல்லை .....
மழை சாரலும் இல்லை....
 நான் மட்டும் நனைந்து ....
போகிறேன் ….
உன் நினைவுகளின் ....
வலிதந்த........................
கண்ணீரால் ..........!!!

^
கடந்த காதல் - குறுங்கவிதை
^
உதட்டால் பேசியதை ....
மறந்து விடலாம்.......
உள்ளத்தால் பேசியதை ....
உணர்வோடு இணைந்ததை ....
எப்படி மறப்பது .....?

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

குறுந்தகவல் கவிதை

வாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ.
^^^
காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு
^^^
சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல்
^^^
காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும்
^^^
நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில்

&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
குறுந்தகவல் கவிதை

SMS கவிதை வரி

ஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும்
^^^
காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு
^^^
சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய்
^^^
காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும்
^^^
உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு
^^^
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
SMS கவிதை வரி 

ஒருவரியில் காதல்கவிதை வரி

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------
" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------
"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "
+
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் காதல்கவிதை வரி 

குறுங்கவிதைகள்

அவள்
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......

ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்

^

என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!

உன் நண்பிகள் என் ....
கவிதையை ......
காதலித்ததால் அவர்கள்...
அழகான காதலை பெற்று ....
விட்டார்கள்.....
தனக்கு உதவாட்டிலும்....
பிறருக்கு உதவும் உன் ....
இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்

கொஞ்சம் கொஞ்சமாய்.இறக்கிறேன்.....!!!

உன்னை ....
பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......
மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....
அதனால் நான் அடிக்கடி இறந்து ....
பிறக்கிறேன்..........!!!
உன்னை......
பிரிந்து வாழ்வதை காட்டிலும்.....
இறந்துவிடுவது நன்று என்று ...
அடிக்கடி ஜோசிப்பேன்.....
உன்னை அது காயப்படுத்தும்....
உன் வாழ்நாள் முழுவதும்....
உன்னை கொன்று விடும் என்பதால் .....
நான் கொஞ்சம் கொஞ்சமாய்....
இறக்கிறேன்.....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எனக்கு உயிர் .........!!!

ஆசையாய்
வாங்கி கொடுத்த....
கொலுசை கழற்றி தந்துவிட்டாய்......
ஆசையாய் எழுதிய கவிதையை ......
கிழித்தெறிந்துவிட்டாய்......
இவை உனக்கு சடப்பொருள்.....
இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!!

கண்ணுக்குள் இருக்கும் - நீ
எப்போதும் மறையகூடாது ....
என்பதற்காக கண்ணே
மூடியதில்லை....
மூச்சு பயிற்சிசெய்ததில்லை ....
இதயத்தில் இருக்கும் நீ .....
மூச்சில்லாமல் தத்தளிப்பாய்....
என்பதற்காக......................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

சனி, 10 செப்டம்பர், 2016

ஹைக்கூக்கள் மூன்று

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது
மரம்
^^^
ஹைக்கூ 01
^^^

முதல் தேதிமுதல் வளர்பிறை
பதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை
மாத சம்பளம்

^^^
ஹைக்கூ 02
^^^

வாழ்க்கை ஒரு சுமை
குழந்தை வயதில் கற்பிக்கப்படுகிறது
பள்ளி புத்தகப்பை

^^^
ஹைக்கூ 03
கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது
மரம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

புதன், 7 செப்டம்பர், 2016

இவை எனக்கு சிறந்தவை

பிறந்த நாட்டில் ....
பிறந்த ஊரில் ....
ஒருபிடி மண் தான் ....
எனக்கு ....
பொன் விளையும் பூமி .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -01

---
பேசும் மொழிகளில் ....
எந்த மொழியில் ....
கலப்படம் இல்லையோ ....
அந்த மொழி ....
எனக்கு தாய் மொழி ..........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -02

&

பேசும் போது எவரின்.....
மனம் புண்படவில்லையோ ......
எந்த சொல் மனதை ......
காயப்படுத்தவில்லையோ ......
அந்த மொழியே எனக்கு .....
செம்மொழி ..............!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -03

&

பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -04

&

நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -05

&

பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -06

&

என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -07

&

பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -08

&

எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -09

&

நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான் 
எனக்கு ......
ராஜ நடை .........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -10

சிற்பமாக வடித்திருந்தால்.....

உனக்கு .....
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை

கடந்த காதல் - குறுங்கவிதை

உன் .....
கண் அசைவில் மதி ......
இழந்தவன் நான் .....
நீ
கண்ணை அசைத்தாய் ....
என்
வாழ்க்கையே அசைந்து .....
விட்டது ..................!!!

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை 

ராஜ நடை .........!!!

நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான் 
எனக்கு ......
ராஜ நடை .........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -10
தொடரும் ...

மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -09
தொடரும் ...

சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -08
தொடரும் ...

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

என் காதலின் கருவி மட்டுமே ..........!!!

உன்னை வர்ணித்து ....
எழுத நான் உன் மீது ....
காதல் மோகம் ....
கொண்டவனல்ல ......
காதல் மீது காதல் ......
கொண்டவன் .......
நீ -என் காதலின் ......
கருவி மட்டுமே ..........!!!

உன் இதழ்களை வர்ணித்து .....
எழுதிய கவிதைகள் எல்லாம் ....
சிறப்பு கவிதை ......
சிறப்பிதழ் கவிதை .....
பக்கத்தில் சிறப்பாய் வருகிறது ......!!!

நீ
சேலை உடுத்து வந்தால் ....
அன்றைய கவிதை தலைப்பு ....
கவிதையாகிறது .....
பாவாடை தாவணியில் வந்தால் .....
பார்வையில் அதிகம் பெற்ற .....
கவிதை பகுதிக்குள் வருகிறது ....!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 05

பூட்டி வைத்திருக்கிறாயே....?

மனை கதவை திறந்து ..... 
வைத்திருக்கிறேன் ..... 
எப்போது வருவாய் என்று ..... 
நீயோ மனக்கதவை .... 
பூட்டி வைத்திருக்கிறாயே....? 

உன்னை நினைத்து கவிதை ..... 
எழுத சற்று கண்ணை மூடினேன் ..... 
அந்த நொடிக்குள் ஆயிரம் ..... 
பட்டாம் பூச்சியாய் வருகிறாய் ..... 
அருவியாய் வருகிறது கவிதை .....!!! 

நீ என்..... 
இதயத்தை கண்ணாடியாய் ...... 
பார்க்கிறாயா .....? 
வருவதும் செல்வதும் புரியவில்லை .....!!! 


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 04