இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 செப்டம்பர், 2015

தேனே என்னை இழந்தேனே

அழைத்தேன் நின்றாய் பார்த்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்

மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்

மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்

சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்

காதலித்- தேன்

நினைத்-தேன் கேட்டதை தந்தாய் ...!
திகைத்-தேன் முத்தம் தந்தாய் .......!

சிரித்-தேன் காதலை தந்தாய்.......!
மகிழ்ந்-தேன் உன்னை தந்தாய் ....!

சுவைத்-தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்-தேன் உயிரை தந்தாய் ..........!

துடித்-தேன் நினைவுகள் தந்தாய் ......!
அழைத்-தேன் பிரிவை தந்தாய் ....!

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

காதல் செய்யாதே ...!!!

நீ என்னில்
வாழ்வதும்
நான் உன்னில்
வாழ்வதும் -தான்
காதல்....!
என் பிரிந்தாய் ...?

குத்துவிளக்கு..
ஏற்றினாலும்...
மின்விளக்கு...
ஏற்றினாலும்...
வெளிச்சம் ....
ஒன்றுதான் ...
வசதிக்காய் ...
காதல் செய்யாதே ...!!!


நீ
பேசினாலும்
பேசாவிட்டாலும்
வலிப்பது என்
இதயம் தான் 

கே இனியவன் - கஸல் 79

நீ மூட்டிய காதல்

நீ மூட்டிய
காதல் தீயை -நீயே
கண்ணீரால் அணைக்க
சொல்லுகிறாய்...!!!

வீட்டு தோட்டத்தில்
பூத்தும் வாடியும் ...
இருக்கும் மலர்கள் ...
உன்னை நினைவுக்கு ...
கொண்டு வருகிறது ....!!!

உயிர் பிரிந்தபின்பும்
வாழும் ஒரே ஒரு
விடயம் காதல் ...!!!

கே இனியவன் - கஸல் 77

ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழையாக இருக்கிறேன்
ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழ்மையில் வாழ்கிறேன்
எடுப்பார் கைப்பிள்ளையக இருக்கமாடேன்....!!!

மன்னிக்க மனம் அதிகமில்லை
மனம் புண்படுமாறு நடப்பதில்லை....!!!

கற்காதவர் மத்தியில் பேசமாட்டேன்
கற்றவர் மத்தியில் கவனமாக பேசுவேன்...!!!

அறிவாளியாக என்னை கருத மாட்டேன்
அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!!

எல்லாம் முடியும் என்னால் என்று கூறமாட்டேன்
எதுவும் முடியாது என்று இருக்கமாட்டேன்....!!!

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு...
என்பதை நிச்சயம் நம்புகிறேன் ..
முடிவு இல்லையென்றால் ......
முடிவில்லையென்று கலங்கமாட்டேன் ..!!!
+
கவிப்புயல் இனியவன்

உண்மையை ஊமையாக்காதே ..

உண்மையை ஊமையாக்காதே ..
உறவுகளை அதிகம் நம்பாதே ..
உணர்வுகள் இறந்தாலும்....
உயிர் இத்துப்போனாலும்....
உறுதியிழந்து வாழாதே....
உறுதி கொள் -நிச்சயம்....
உறுதியான வெற்றிஉண்டென்று....
உன் முகத்தை திருத்து....
உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி....
உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்....
உதட்டில் உண்மைபேசு....
உலகம் இப்போ விலை உலகம்....
உலகமயத்தில் இது சாதாரணமப்பா ..
உன்னை நீ மதிப்பீடு செய்....
உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!

எப்படி விலக்க முடியும்

எப்படி விலக்க முடியும்

நீ என்னை
ஒதுக்க ஒதுக்க
என் கவிதை
ஓங்குகிறது

நானோ -உன்
ஆணிவேர்
எப்படி விலக்க முடியும்


நான் உனக்காக...
காத்திருந்த மணி....
என் ஆயுள் முறையும் ....
நேரமடி ....!!!

கே இனியவன் - கஸல்

கஸல் தொகுதி -03

உன் 
காதல் எதிர்பார்ப்பு... 
என் 
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!


உன் வார்த்தை 
வலியானது-எனக்கு 
சுகமானது 


உனக்காக தினமும் 
காத்துக்கொண்டு 
நிற்கிறேன் 
ஏக்கம் தானே காதல் 


கஸல் தொகுதி -03

கஸல் தொகுதி -02

காதல் 
இருதலை எறும்பு 
காதல் வனப்பு 
காதல் எதிர்ப்பு 

உன் ஏக்கம் 
உனக்கு வாழ்க்கை 
எனக்கு வலி 

காதலித்தது ...
வாழ்வின் வசந்தம் 
நிலையில்லாதது 


கஸல் தொகுதி -02

கே இனியவன் - கஸல் 01

தேவதையே ..... 
உன்னிடம் பெறும் வரத்தை .... 
என் காதலியிடம் பெற்றுக் 
கொண்டிருக்கிறேன் ....!!! 

ஆதியும் அந்தமும் 
இல்லாதவள் நீ 
என்னவளைபோல்....!!! 

ஒவ்வொரு 
கருணைச்செயலும் 
காதல் தான் .!!! 
ஒவ்வொரு கொலையும் 
காதல் தோல்விதான் ...!!!

கே இனியவன் - கஸல் 01