இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 டிசம்பர், 2015

காட்சிப்பிழைகள்


காட்சிப்பிழைகள் -  கே இனியவன்

காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்) 

காதல் 
ஒரு மந்திர கோல் ..... 
இரண்டு இதயங்களை .... 
ஒன்றாக்கி விடும் ....!!! 

நெற்றியில் ... 
குங்கும பொட்டு.....? 
அப்பாடா - சாமி .... 
கும்பிட்டு வருகிறாள் ....!!! 

தேவனிடம் .... 
பாவ மன்னிப்புக்கேட்கிறாள் .... 
என்னிடமும் கேட்பாள் .....!!! 

^^^ 

கனவு 
நிஜத்தில் நிறைவேறாத ... 
ஆசைகளை நிறைவேற்றும் .... 
நீர்க்குமிழி .....!!! 

திடுக்கிட்டு எழுந்தாள் .... 
தாலியை கண்ணில் வணங்கி... 
என்னை பார்த்தாள் ....!!! 

இன்னும் 
சற்று தூங்கியிருந்தால் .... 
சொர்கத்தை......... 
பார்த்திருப்பேன்....!!! 

^^^ 

நீ என்னை .... 
காதலிக்கும் வரை ... 
உதடு அசைவெல்லாம் ... 
என் பெயர் தான் ....!!! 

அவள் 
தந்த புத்தகத்துக்குள் ...... 
மடித்த காகித துண்டு .... 
இன்ப அதிர்ச்சி .... 
படித்துப்பார்த்தேன் ... 
அட வெறும் 
பாட சிறு குறிப்புகள் ....!!! 

உன் அருகில் .... 
என் உருவ அளவில் .... 
எவர் வந்தாலும் ... 
நெஞ்சு படபடக்குது ....!!! 

^^^ 

என் வீட்டில் -நீ 
உன் வீட்டில் - நான் 
இன்பமாய் வாழ்கிறோம் 
நம் பெற்றோர் .... 
திருமணத்துக்கு முன் ... 
எப்படி சம்மதித்தனர் ....? 

பூமி தட்டை..... 
கோளமாக இருந்திருந்தால் ... 
கடல் நீரெல்லாம் .... 
உன்னைப்போல் வழிந்து ... 
ஓடியிருக்கும் .....!!! 

அஞ்சியவன் கண்ணுக்கு.... 
அசைவதெல்லாம் பேய் .... 
வீட்டுக்கு கல்யாண தரகர் .... 
வந்துபோனபோது .....!!! 

^^^ 

காட்சிப்பிழைகள்....................( பலவகை காட்சி பிழைகள்) 

தப்புப்பண்ணிவிட்டேன் .... 
அக்கறையில் நின்றிருந்தால் .... 
உன்னை தொட்டிருப்பேன் ... 
இக்கரையில் நின்று .... 
தவிக்கிறேன் - வானமே ....!!! 

@@@ 

கண்ணாடியில் தெரியும் ... 
எழுத்துப்போல் -அவள் 
வலமிருந்து இடமாக இருக்கிறாள் ... 
நான் மேலிருந்து ...... 
கீழாக முழிக்கிறேன் ....!!! 

@@@ 

காதல் 
ஒரு கழுகு .... 
அருகில் இருந்தால் ... 
பிரமாண்டம் .... 
தொலைவில் இருந்தால் .... 
கடுகு .....!!! 

@@@ 

கயிற்றை மிதித்து ... 
பாம்பு என்று கத்தினான் .... 
நாக தோஷ பூஜை .... 
நடக்கிறது .....!!! 

@@@ 

அறையிலிருந்து .... 
உருக்குலைந்து வந்தாள் 
மகள் ......! 
பதறி அழுதாள் -தாய் ...! 
திரெளபதி வேஷத்தின் 
ஒத்திகை அம்மா ....!!! 

@@@ 

மூக்கும் முழியுமாய் ... 
இருக்கிறாள் - எனக்கு ... 
பிடிக்கவில்லை .... 
மகனே .....!!! 

அம்மா 

மூக்கு கண்ணாடியால் பார் 
பூதக்கண்ணாடியால் பாராதே ...!!! 

@@@ 

பூமி தட்டை .... 
அறிஸ்ரோட்டில் தத்துவம் .... 
ஆயிரம் ஆண்டுகள் ... 
நிலைத்திருந்தது ....! 

பூமி கோளவடிவம் .... 
கலிலியோ கலிலி ... 
அடித்தே கொன்றார்கள் ... 
யதார்த்த வாதியை .... 
விஞ்ஞானத்தின் காட்சிப்பிழை ....!!! 

@@@ 

காட்சிப்பிழைகள் இருவகைப்படும் 

(1) அல் நோக்கல் - காட்சிப்பிழைகள் 
(2) வழு நோக்கல்(திரிபுரக்காட்சி ) - காட்சிப்பிழைகள்


எழுத்து தளத்தில் கஸல் திருவிழா 
என் பதிவுகள் 

இவை பழமொழிகள் ...!!!

கத்தி எடுத்தவனுக்கு ....
கத்தியால்  மரணம் ....
யானை பாகனுக்கு ....
யானையால் மரணம் ....
இவை பழமொழிகள் ...!!!

எதனால் ...?
இன்னொரு உயிரின் ....
வாழ்வுரிமையை பறித்தால் ....
சுதந்திர உரிமையை ...
பறித்தால் நிலை அதுதான் ....!!!

கைபேசியை பார்த்து பார்த்து....

கைபேசியை பார்த்து பார்த்து....
கழைத்து விட்டேன் -ஒரு சிறு ....
செய்தியை பிறக்கும் வருடத்தில் ...
வாழ்த்தி அனுப்புவாய் என்று ......!!!

வாழ்கை வாழ்வதற்கே .....
அதை அன்பாய் வாழ்ந்து ....
முடிப்பதே வாழ்கை ....
கோபத்தையும் கர்வத்தையும் ....
வளர்க்காதே - வா அன்பே .....
புதிய ஆண்டில் ....
புது வாழ்வு வாழ்வோம் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

உலக சாததையா செய்யப்போகிறாய் ....?

நீ ...
எத்தனை வருடம்... 
மௌனமாய் 
இருக்கபோகிறாய்...?
உலக சாததையா 
செய்யப்போகிறாய் ....?
அதிககாலம் மௌனமாய் ...
இருந்த ஜோடி நாம் என்று ...?

இன்னும் சிலமணி நேரமே .....
இருக்கிறது முடித்துவிடு ....
மௌனத்தை - வேண்டாம்...
அடுத்த வருடத்துக்கும் ....
துன்பம் ......!!!

என்னோடு பேசிவிடு ......!!!

அன்பே 
இன்று வருடத்தின் ....
இறுதிநாள் இன்றாவது 
என்னோடு பேசிவிடு ......!!!

கடந்த
வருடத்தில் நடந்தவை .....
கடந்தவையாகட்டும் .....
நடத்து வந்ததை மறந்து ...
நடக்கப்போவதை நினை ....!!!

பிறப்பது புத்தாண்டாயின் .....
நீ என்னோடு இணைவதில் ....
தங்கியுள்ளது எனக்கு ....
இல்லையேல் பொழுது விடியும் ....
வருடம் மாறாது எனக்கு ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

நான் இறந்ததை நானே பார்க்கிறேன்

உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!

என்
இறந்த உடலுக்கு அருகில் 
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!

நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

மரண ஊர்வலத்தை பார்த்துகொண்டிருகிறாய்....!!!

நீ என்னோடு ....
கோபமாய் இருக்கிறாய் ....
நன்கு தெரிகிறது ...
என்னோடு பேசும்போதே ...
பூமரத்தின் இலையை ....
பித்துகொண்டு இருகிறாய்
பாவம் அதை நிறுத்து ....
அது என்னசெய்தது உனக்கு....?

உன் கோபத்தால் ....
நான் உயிரோடு இருந்தும் ....
என் மரண ஊர்வலத்தை ....
பார்த்துகொண்டிருகிறாய்....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

புதன், 30 டிசம்பர், 2015

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! 
-------

அழிவை ஏற்படுத்தாமல் .....
அன்பை பெருக்கிட..வருக வருக ....!!!

ஆக்ரோயத்தை காட்டாமல் .....
ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!!

இழப்புகளை ஏற்படுத்தாமல் ....
இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!!

ஈனச்செயல் புரியாமல் ....
ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!!

உலகை உலுப்பாமல்....
உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!!

ஊனங்களை ஏற்படுத்தாமல் ....
ஊர் செழிக்க ..வருக வருக .....!!!

எதிரிகளை தோற்றுவிக்காமல் ....
எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! 

ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ....
ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!!

ஐயத்தை தோற்றுவிக்காமல் ......
ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....
ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஓலமிட மக்களை வைக்காமல் .....
ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!!

ஔடத்தை பாவிக்காமல் .....
ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....வருக வருக ....!!!

^

கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்

!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!

இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை 
பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .
என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!

!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!

கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........
..........எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................
பத்திர காளிமீது பக்தி கொண்டவள் .................
..........பத்தினியாள் பக்தியாள்............................
சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........
.........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............
சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்..........
.........சீற்றம் கொண்டாள் சிங்கம்போல் ............
சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!!


!!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!!

தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்.......
..............காதலன் பெயரோ கருணாகரன் ............
மங்கையர்கரசியை மனதால் மணந்தவன் ........ 
......மங்கையர்கரசியும் மனதால் மணந்தவள் ......
கட்டழகன் காளைபோல் உடலழகன் வீரன் .........
.....சிங்கம் போன்றவன் சேனைகளை வென்றவன் .......
அவனது நடையோ மேகத்தின் கதிர்போன்றவன் .....
....அவனது கண்ணோ காந்த கண்னழகன்.....!!!


!!!............மங்கையர்க்கரசியும் மார்த்தாண்டனும் .................!!!

மங்கையர்கரசியாரை மயக்க நினைத்தவன் ....
....சித்தப்பனால் மாப்பிள்ளையாக வந்தவன் .....
மங்கையர்கரசியாரை அடைய துடித்தவன் ........
....மங்கையர்கரசியாள் வெறுத்து ஒதுக்கப்பட்டவன் .......
கருணாகரனை வஞ்சகமாக கொண்டவன் 
....மங்கையர்கரசியால் கொலைசெய்யப்பட்டவன்.....!!!

!!............மார்த்தாண்டனை மங்கயர்க்கரசி வர்ணித்தது ..............!!! 

சித்தப்பனால் திருமணத்துக்கு வடிவமைகக்பட்டவன் .....
....மார்த்தாண்டனை மணந்துவிடு அரசியே .....
வேறு ஒரு வழியில்லை உனக்கு நான் தருவதற்கு .....!
....சீறி எழுந்தாள் மங்கயர்க்கரசி கொட்டி தீர்த்தாள்.....
சிங்கத்தை பார்த்தகண்னால் செந்நாயை பார்ப்பதா ......
...சேனை படையெல்லாம் வென்ற என்னைவனை.......
இன்னோடு ஒப்பிடுவதா வெட்கம் வெட்கம் ..........!!!

!!!........மங்கையர்க்கரசி காதலனுக்காய் காத்திருத்தல் .................!!!

காதலனுக்காய் காத்திருந்தாள் காளிகோயிலில் ....
....தூரத்து திசைவரை கண் விட்டு தேடினாள்...........
காத்திருந்த காதலனை காணாது துடித்தாள் ...........
....காரிருள் மேகத்தில் முழுசந்திரன் நிற்க ......
தூரத்தில் புலியும் கரடியும் நரியும் ஊளையிட ....
.....காத்திருந்தாள் காத்திருந்தாள்..........
கருணாகரனுக்காக காத்திருந்தாள் அரசி .......
.....சட்டென்றே துர் செயல்கள் தோன்றின .....
முழுசந்திரனை கார்மேகம் மறைத்தது ......
.....பலமாகிய காற்று பலமிழந்தது ...........
ஊளையிட்ட மிருகங்கள் மௌனமாகின .....
....ஆலயத்தின் மீதிருந்த ஆந்தை அலறாமல் ....
அத்தனையும் சற்று நேரத்தில் நிசப்தமானது.....
...தனித்தே தவித்துகொண்டிருந்தாள் கன்னி ......!!!


!!!..........மங்கையர்க்கரசி காதலனை காணாது துடித்தாள்.........!!!

கருணாகரனே எனவனே கருணாகரனே ......
....இன்னும் எதற்கடா என்னை வதைக்கிறாய்.....
குறித்த நேரத்தில் சற்று மீறினாலும்........
....இறந்துவிடுவேன் என்று அறியாதவனா நீ ......
வந்துவிட்டா கண்ணாலனே கருணாகரனே .....
...வெந்து துடிக்கிறேன் கருணாகரனே .......
தேவியே காளியே நான் வணங்கிய தெய்வமே ....
...உன்சந்நிதானத்தில் ஒன்றுசேரவே தனித்து வந்தேன் ....
என்னவனை காணாது நெஞ்சு துடிக்கிறது ....
....என்னாச்சோ ஏதாச்சோ என் தேவியே காளியே ....!!!


!!!...................கருணாகரன் கொலைசெய்யப்படுதல்.............!!!

என்னவன் எங்கே என்னவன் எங்கே தாயே .....
...புலம்பிகொண்டிருக்கையில் வந்தான் மாத்தாண்டன் .....
புலம்புவதை நிறுத்து கருணாகரன் என்று அழைபப்தை நிறுத்து ,,,,,
....அவன் இனி வரமாட்டான் அவன் குரல் இனிகேளாது.....
மங்கையர் திலகமே உன்னில் நான் கொண்ட காதலால் ....
....அவனை தனிவழியில் என் வாளால் துண்டித்துவிட்டேன் ......
இனி நீ கண் கலங்காதே என் கயல் விழியாளே உன் கண்ணில் ....
....இனிமேல் கண்ணீர்வடிந்தால் என் இதயம் வெடிக்கும் ......
அவனை விட நான் உன்னை அதிகமாய் காதலிக்கிறேன் .....
...உன் அருள் கண்ணால் ஒருமுறை என்னை பாராயோ ....
என் உடல் பொருள் ஆவியெல்லாம் உனக்கே சமர்பிக்கிறேன் ....
,,,ஏற்றுக்கொள் என்னை ஏற்றுக்கொள் என் கெஞ்சினான் ....!!!

!!!..............மங்கையர்க்கரசி சற்று நேரம் அசைவற்று விட்டாள்......!!!

மாத்தாண்டா முதலில் என்னவன் இறந்த இடத்தை காட்டு .....
...கத்தினாள் கதறினாள் ஓலமிட்டாள் கூட்டிபோ என்றாள்.....
சென்றார்கள் இருவரும் தனிவழியில் சென்றார்கள் .....
....நிசப்தம், நிசப்தம், எங்கே பார்த்தாலும் நிசப்தம்......
மேகம் சற்று விலகியது மெல்லிதாய் சந்திரன் தென்பட்டான் .....
.....மார்த்தாண்டன் திடீரென நின்றுவிட்டான். கன்னியும் நிற்கின்றாள்......
அவள் பெருமூச்சைத் தவிர அங்கே வேறு சப்தம் இல்லை........!!!

.......இருண்ட மரத்தடியில் மினிங்கிகொண்டது ஒரு பொருள் ..... 
அங்கே சென்றாள் அதிர்ச்சியடைந்தாள் அதிலேயே ஓலமிட்டாள் ....
....'கருணாகரா! கருணாகரா! என் காதல் கணவனே.......
எங்கே சென்றுவிட்டாய்! உனக்கு மாலையிடலாம் என்று வந்தேனே!
....ஒரு நிமிஷத்தில் வீர சுவர்க்கம் சென்றுவிட்டாயே........
இனி இந்த உலகத்தில் அன்புக்கும் வீரத்துக்கும் யாரே உளர்? 
...உன்னை என் உயிர் எனவே நினைந்திருந்தேனே.....
நீ போன பிறகு எவ்விதம் நான் இருந்து என்னபயன் ,,,,,,
.,,,,,என் நாதா, உன் உதடு அசைகிறது போல் இருக்கிறதே! 
என்னை அழைக்கிறாயோடா..வந்தேன்...வந்தேன்.....!!!
......நெடுநேரம் புலம்பி கருணாகரன் மீது விழுந்தாள் .....!!!

!!!...........மாத்தாண்டனை கொல்லுதல்.................!!!

மங்கையர்க்கரசி எழுந்தாள் அவள் முகம் காளியானது.....
......மேகங்கள் சந்திரனை மூடின அவள் ரெளத்திராகாரமாள் ....
மார்த்தாண்டனை ஏற எடுத்துப் பார்த்தாள்.நாகத்தைக் கண்ட ....
......பறவைபோல் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை....
பாதகா! என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்று விட்டாயே.......
....என்னை மணக்கதானே செய்தாய் வா வா என்னை ......
மணந்துகொள் வா வா அருகே வா கத்தியபடி ஈட்டியை ....
.....மாத்தாண்டவன் மீது செருகி அவனை கொன்றாள்....... !!!

!!!................மங்கையர்க்கரசி மரணித்தல் .......................!!!

கருணா உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை ....
....காளியே அம்மா என் உடலை ஏற்றுகொள்.....
என்னவன் என்னை அழைக்கிறான் நான் போகிறேன்.....
....இனியும் தாமதியேன் இதோ வந்துவிட்டேன் ......
என் கடமை தீர்ந்தது உன்னை கொண்டவனை கொன்றுவிட்டேன் .....
....என் உயிரும் உடலும் உன்னையே நினைத்து வாழ்ந்தது .....
இதோ என் உடலும் உயிரும் உனக்கே அர்பணிக்கிறேன் .....
...அவனருகே சென்றாள் தன்னை தானே குத்தினால் ....
அவன் மீது வீழ்ந்து தன்னுயிர் நீத்தாள் மங்கையர்க்கரசி....!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

குறிப்பு ; இந்த கதையை கவிதை வடிவில் அமைக்க எனக்கு பலமணிநேரம் ஆகியது 
மாணவர்களுக்கு மற்றும் ஆர்வலருக்கு இது பயன் பட்டால் அதுவே என் திருப்பதி 

நன்றியுடன் ;கே இனியவன் -யாழ்ப்பாணம்