இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜனவரி, 2014

ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்

சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு
சமூக கண்ணோட்டத்துடன் பார்
சமூக பொறுப்பு நம்முடையது
சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில்
சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!!

இரங்கி கேட்பவர்களுக்கு -நீ
இரக்கத்துடன் பிச்சை போடாதே
யாருக்கு யார் பிச்சை போடுவது ..?
எல்லோரும் ஒருவகையில்
பிச்சை காரரே ....!!!

அனாதை இல்லத்தில் வாழும்
குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே
முதியோர் இல்லத்தில் வாழும்
பெற்றோருக்கு பிள்ளை அன்பும்
பிச்சையே
உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும்
ஒருவகையில் பிச்சையே ...!!!

கண் இழந்தோர் .கால் இழந்தோர்
பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும்
இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும்
திடகார்த்தமான வலுவும் உள்ள நீ
பிச்சை எடுக்கிறாய் .....!!!

நீ பிச்சை எடுக்க தகுதியானவன்
பொருளாதார பிச்சை -அல்ல
தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து
நில் துணிந்து செல் - உடம்பை வருத்து
நீயும் ஒரு சாதனையாளனே
இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர்
ஒரு சாதனையாளனை வீணாக்காதீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக