இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 ஜூலை, 2013

கே இனியவன் நகைசுவை கவிதை


என்னவள் சிரித்தாள் .. 
சீனி" டப்பா " உருண்டுவருவது 
போல் இருக்கும் ...!!! 

என்னவள் கதைத்தால் .. 
தகர "டப்பா " உருண்டுவருவது 
போல் இருக்கும்...!!!

என்னவளே நீ ஓடி வந்தால் .. 
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்...!!!

சிலநேரம் 
செல்லமாய் அடிப்பாய் .. 
இரும்பு குண்டு இடித்ததுபோல் இருக்கும்..

என்னதான் என்னவள் "'டப்பாவோ"' பீபபாவோ"" 
என்" இதய டப்பாவுக்குள் " குடிகொண்டிருக்கும் ..
அன்பு டப்பா .....!!!

கொடூரம் கொடூரம் -ஒரு தலை காதல் ...!!!

சொல்லவா விடவா ...?
சொன்னால் ஏற்பாயா...?
நிராகரிப்பாயா ...?
மண்புழு மேல் மண்ணெண்ணையை ..
ஊற்றியதுபோல் துடிக்கிறேன்
புரிந்துகொள் ..இல்லை
ஊரைவிட்டு பிரிந்து செல் ...!!!

சீ... சீ... நீ ஊரை விட்டு
பிரிந்து சென்றாலும் -உன்
நினைவில் விட்டு பிரியவா போகிறேன் ...?
தயவு செய்து ஊரைவிட்டு சென்றுவிடாதே ...!!!

என் முன் யாருடனும் கதைக்காதே ..
என் இதயம் தாங்க தயார் இல்லை ...!!!
இல்லை இல்லை நான் சந்தேகப்படவில்லை ..
நீ நன்றாக பேசு ...!!!

அப்போது என்றாலும் உன் சிரிப்பை ..
காணும் பாக்கியம் கிடைக்கட்டும் ..!!!
காதலித்து தொலைக்கலாம் ..
நீ மறுத்தால் என்ற பயம் ...
காதலை சொல்ல மறுக்கிறது ...!!!
கொடூரம் கொடூரம் -ஒரு தலை காதல் ...!!! 

கே இனியவன் (சென்றியு ) ஹைக்கூக்கள்

எல்லாமே சேர்ந்தது
எல்லாமே சென்றது
தர்மம் இல்லாத சொத்து

**************

இறங்கும் பாதையை தடை செய்யாதீர்
கூக்குரல் இட்ட பயணி
பஸ்ஸின் கூரையில்

**************

சாகசங்கள் செய்து காட்டுவோம்
சன கூட்ட நெரிசலுக்குள்
மோட்டார் சைக்கிள் வீரர்கள்

**************

நன்றி மறந்தவன்
தமிழன்
தாங்க்ஸ் சொல்லுகிறான்

(நடிகர் கமலஹாசன் பேசியதை
அவதானித்தேன் அதிலிருந்து உருவாக்கினேன் )

**************

குழந்தை பருவம்
முதுமை பருவம்
சிரிக்கும் போது பல் ..?

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள் ஹைக்கூ வடிவில்

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள்
சில ஹைக்கூ வடிவில்

பிறர் பிள்ளையை
தன் பிள்ளையாக வளர்
குயில்

*******************

அழகாக இருந்தால்
ஆபத்தை சந்திப்பாய்
கிளி

*******************

கூட்டு குடும்பத்தை
கற்று தந்தது
காகம்

******************

நல்ல வாய்ப்பு வரும் வரை
பொறுமை வேண்டும்
கொக்கு

******************

உயரே சென்றால் நிலையை
நிலையாக வைத்துக்கொள்
பருந்து 

மனம்

நாள் தோறும் சுத்தீகரிப்பு 
குப்பை குறையவில்லை 
மனம்

பழைய பூ வைக்கிறாய் ....!!!

காதல் கடிதம் 
போட்டேன் 
எனக்கே வந்தது ...!!!

கருங்கல்லில் 
ஆணி அடிப்பது போல் 
நம்காதல் 

காதல் தெய்வத்துக்கு 
புது பூ வைக்கிறேன் 
நீ 
பழைய பூ வைக்கிறாய் ....!!!

கஸல் 283

உன் காதலைப்போல் ...!!!

காதல் 
தேன் கூடு 
குழவிக்கூடு 
உனக்கு எது ....?

பாலும் வெள்ளை 
கள்ளும் வெள்ளை 
உன் காதலைப்போல் ...!!!

வலையை போட்டேன் 
காதல் மீனுக்கு பதில் 
காதல் கல் வருகிறது 

கஸல் 282

நீ தாமரைமேல் தண்ணீர்

இதயத்தில் 
இருக்கவேண்டிய நீ 
குரல் வளையில் 
இருக்கிறாய் ....!!!

காதல் எனக்கு 
உள்ளம் 
உனக்கு 
உடல் ....!!!

நான் தண்ணீர் 
மேல் தாமரை 
நீ தாமரைமேல் 
தண்ணீர் 

கஸல் ;281

பிழைக்குமா ....?

திடீரென ஏற்றபட்டது ..
நெஞ்சுவலி
பதட்டப்பட்டார் அம்மா
எக்ஸ்ரே எடுக்க சொன்னார் டாக்டர் ...
கேலியாக கேட்டான் நண்பன் ...
என்ன மச்சி இன்னைக்கு ...
வாட்டிட்டாள் போல அவள் ...!!!
நண்பன் அல்லவா அவன் சொல்லது ..
பிழைக்குமா ....?

பனிப்போர் ...!!!

இரண்டு நாட்டுக்கு இடையில் ...
பனிப்போர் ....!!!
குடும்பத்தில் இருவருக்கும் ..
இடையில் பனிப்போர் ...!!!
என்றெல்லாம் சொல்லும் போது...
புரியாத அர்த்தம்...?

நீ ...
ஐஸ் கிறீம் சாப்பிடும் போது ...
உதடும் ஐஸ் கிறீமும்..
மோதியபோதுதான் ....
ஐயம்  கொண்டேன் ...?
இதுவோ பனிப்போர் என்று ...?

நீ சிரித்த போது ..
என் இதயம் சில் என்றதே ...
அதுவோ பனிப்போர் ...?

மாலை எனக்கு குறுஞ்செய்தி ...
அனுப்பினாயே -நான் ...
கோயிலுக்கு போகிறேன்....
அந்த செய்தி பார்த்தவுடன் ...
என் உடல் குளிர்ந்ததே ...
அதுவோ பனிப்போர் ...?

பனிப்போருக்கு முடிவுவரும் ...!!!
நீ என்னை மணமுடிக்கும் போது ...!!!

மண வாழ்வா ...? மனச்சாவா ....?



காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???

உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!

உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!

உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!

இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???

நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனச்சாவு ...!!!

கண் காதலுக்கு

கண் காதலுக்கு
உனக்கு
கண்ணீருக்கு ...!!!

உன்
நினைவுகள்
அழுகை
கனவுகள்
இன்பம்

காதலில் பால்
நான் ...!!!
நீ
புளிக்கும் தயிர் ...!!!


கஸல் 280

ஊதியணைக்கிறாய்

காதலில்
உயர பறக்கிறேன்
நீ
இறக்கையை
உடைக்கிறாய்

காதலில்
பாம்பின் வாயில்
உள்ள தவளை நான்

காதல் தீபம்
காட்டுகிறேன் -நீ
ஊதியணைக்கிறாய்

கஸல்  279

நீ சின்ன தீப்பொறி

என் 
காதல் இருட்டறை 
நீ 
சின்ன தீப்பொறி 

என் 
காதல் கீதம் இன்பம் 
நீ சோக கீதம் 

மூழ்கும் படகில் 
உயிர் போகிறது 
நீ முத்தெடுக்க
சொல்கிறாய் 

கஸல் 278

ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக

ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக 

சுறு சுறு பாக்க இரு 
எதிர்காலத்துக்கு சேமி 
  எறும்பு 

***************************
ஐம் புலன்களையும் அடக்கு 
ஞானியாவாய் 
   ஆமை 

****************************
முன்னேற்றத்துக்காக 
கொள்கையை மாற்று 
  பச்சோந்தி 

******************************

பொறுமையாக செயல்படு 
இலக்கை அடை
    நத்தை 

******************************

செய்வது கொடுமை 
ஊரில் நற்பெயர் 
  நல்ல பாம்பு (நாக பாம்பு )

மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைகூ )

 மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைகூ )
மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் 
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே 
நம்பிக்கையையும் வளர் 
யானை 

காப்பவனை காப்பாற்று 
கற்றுதந்தது 
நாய் 

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே 
புலி 

வாழ்க்கை ஒரு சுமை 
அழாமல் சுமந்துகொள் 
கழுதை 

உழைக்காமல் சாப்பாடு 
மெத்தையில் தூக்கம் 
பூனை 

இனப்பெருக்கம் 
கற்றுத்தந்தது 
பன்றி 

செவ்வாய், 30 ஜூலை, 2013

நட்புக்கு எந்த பூ சின்னம் ...?

காதலுக்கு ரோஜா சின்னம் 
அழகாகவும் இருக்கும் 
ஆபத்தாகவும் இருக்கும் 
நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
நட்புக்கு வாடவும் தெரியாது ..
குற்றவும் தெரியாது ...!!!

நன்றி - கவியருவி ம. ரமேஷ்

கஸல் - எளிய விளக்கம் நன்றி - கவியருவி ம. ரமேஷ்

‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’யுடன் பேசுதல் என்று பெயர். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தை. சிறுபான்மை ஆன்மிகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ போன்ற மேற்கத்திய வடிவங்களைத் தமிழ்மொழிக்கேற்ப மாற்றங்களைச் செய்துகொண்டது இக்கஸலுக்கும் பொருந்தும். பேச்சுச் சந்தத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் அம்முறை தமிழில் தவிர்க்கப்படுகிறது. எனவே தமிழ்க் கஸல் புதுக்கவிதை வடிவில் காணப்படுவதால் புதுக்கவிதை ஆகிவிடாது. தமிழில் முதலிரண்டு (மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப் பூ ) கஸல் கவிதைத் தொகுதிகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைத்துள்ளார்.

நன்றி - கவியருவி ம. ரமேஷ்

இன்றைய கஜல்கள்

இன்றைய கஜல்கள்

“பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கஜல் வடிவமானது காதலையும், இறைமையையும் மட்டும் பாடாமல், வாழ்வின் எதார்த்தங்களையும் தெளிவாகப் படம் பிடித்திட வேண்டும் என்று ஹலி என்பவர் குரல் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து அக்பர் அல்லாபதி, இக்பால் போன்றோர் இக்கொள்கையை வலியுறுத்தினர். அதோடு மட்டுமல்லாது சமூக, அரசியல், மனிதம் போன்ற வாழ்வின் எல்லாத் துறைகளைப் பற்றியும் பாடப்படுதலாக கஜல் இருந்திட வேண்டும் என்றனர்” என்று சாதிக் முகம்மது கூறுகிறார்.

கஜல் கவிதையில் ஆழம் கண்ட கவிஞர்களான மஜாஸ், ஜாஸ்பி, அக்தர் அன்சாரி, ஃபாயிஜ், மஜ்ரூத் சுல்தான்புரி, பல்வேஸ் ஷாஹிதி, குலாம் ரப்பானி தாபன், ஜான் நிஸார் அக்தர் போன்றோரெல்லாம் காதலை மட்டுமே மையமாக வைத்துப் படைக்காமல், சமூக அரசியல் புத்துணர்வுக் கொள்கைகளைக் கொண்டு, மனித மனத்தோடு எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக உறவாடக் கூடிய வகையில் கஜல்களைப் படைத்து வெற்றிவாகைச் சூடினர்.

இன்றைய இளம் கவிஞர் பட்டாளமானது, கஜலின் பரிமாணங்களைச் செழுமைப்படுத்திடும் சீரிய பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது. “ஹசன்நயிம், பானி, ஷா தம்கானாத், கிருஷ்ணா மோகன், ஷாரியார், பஷீர் பத்ர், மக்மூர் சய்தி போன்றோர் இன்றைய குறிப்பிடத்தக்க கஜல் கவிஞர்கள் ஆவர். ஹசன் நயிம் டெல்லியில் ‘கஜல் அகாதெமி’ என்ற ஒன்றை நிறுவி நவீன கஜல் வடிவத்தை இளைய தலைமுறைக் கவிஞர்கள், வாசகர்களிடையே பரப்பி வருகிறார்”29 என்று இந்திய ஒப்பிலக்கிய நூல் சுட்டிக் காட்டுகிறது.
தமிழில் கஜல் கவிதையின் வடிவ முயற்சி மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளது. உருது, பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களே கஜல் கவிதையின் வடிவத்தை உள்வாங்கி அதைப் பிற மொழிகளில் அறிமுகம் செய்ய இயலும். தமிழகத்தைப் பொறுத்தவரை உருது பாரசீக மொழிகளில் தேர்ச்சியும், புலமையும் மிக்கவர்களாக இசுலாமியர்களே திகழ்வதால், தமிழில் கஜல் கவிதையின் அறிமுக முயற்சி இவர்களின் புலமையைச் சார்ந்தே அமைகிறது.

அப்துல் ரகுமான் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, மதுரையில் பிறந்து, தியாகராயர் கல்லூரியில் தமிழ் இலக்கிய இலக்கணத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவராதலின், தமிழில் கஜல் வடிவக் கவிதையை அறிமுகம் செய்யும் முயற்சி அவருக்கு சாத்தியமாகியுள்ளது.

கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள்

கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள் - அதாவது பாடுபொருளின் கரு
கவிக்கோ கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள் பற்றி கூறுகையில், சில வல்லெழுத்து ஒலிகளையும், மெய் இரட்டிப்பதையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் காதலின் துயரத்தால் ஏங்கித் துடிக்கும் காதலன், காதலியை விளித்துக் கூறுகின்ற முறையிலேயே அமையும். காதலியின் சௌந்தர்யம், தவிக்க வைக்கும் பண்பு, காயம்பட்ட இதயத்தின் வேதனை என்ற தொனியில் கருத்துக்கள் அமையும். காதலியை விளிப்பது என்ற தொடர்பு தவிறக் கண்ணிகளிடையே கருத்துத் தொடர்பு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது கஜல் ஆகாது. (காதல் உலகில் ஒன்றிற்கொன்று தொடர்பற்ற உணர்ச்சி வசப்பட்ட உலவாக் கட்டுரைகளே பேசப்படும் என்ற ஆழ்ந்த உண்மையைக் குறிப்பால் உணர்த்தும் நுணுக்கமான வரையறை இது) பதினேழு மரபான சந்த விகற்பங்களும், இருபத்தாறு, அதற்கும் மேற்பட்ட புதிய சந்த விகற்பங்களும் கஜலுக்கு உண்டு. விட்டில்-விளக்கு, பூ-புல்; சபை (மஹயில்); இலட்சிய அடைவிடம் (மன்சில்), கடல்-நீர்த்துளி; மதுக்கடை-மது பரிமாறுகிறவன்; வசந்தம்-இலையுதிர் காலம்; முள்; கூடு; நீர்ச்சுழல், புயல், கரை, தோணி போன்ற ஏராளமான படிமங்களும் குறியீடுகளும் இதில் கையாளப்படும்”என்று தெளிவாக விரித்துரைக்கிறார்.

கஜல் இலக்கணம்

கஜல் இலக்கணம்
“உருது இலக்கியத்தில் கீத், நக்ம், ருபையாத், ஆஸாதி ஷாய்ரி, இப்படிப்பல வடிவங்கள் உள்ளன. இவற்றின் அமைப்புகள் பின்வருமாறு

கீத் - பாடல்
நக்ம் - விருத்தம் (நக்மா-விருத்தம் போன்ற அழகி)
ருபை - நான்கு அடிகள் (ருபை ஒருமை, ருபையாத் பன்மை)
அஸாதி ஷாய்ரி - புதுக்கவிதை, நவீன கவிதை
மேலும், சூஃபியிசத்திலிருந்து உருவான கவ்வாலி என்னும் குழுப்பாட்டு கஸீதா எனும் புகழ்மாலை எனப்பல யாப்பு வகைகள் உருதுவில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தன்மையையும் சூழலையும் கொண்டவை. அஸாதிஷாய்ரி நீங்கலாக மற்ற அனைத்துக்கும் இலக்கணம் உண்டு”என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
கவிக்கோ கூறுகையில், “கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லைஎன்கிறார்.

கஜல் - சொற்பொருள் விளக்கம்

கஜல் - சொற்பொருள் விளக்கம் 

கஜல் என்ற அரபிச் சொல்லின் நேரடிப் பொருள் ‘மான்கண்’ என்பதாகும். ‘ழுயணநடடந’ என்ற சொல்லுக்கு வட ஆப்பிரிக்காவில் காணப்படும் சிறிய, மென்மைத் தன்மை வாய்ந்த மான் வகை என்பது பொருள். இவ்வகை மான்கள் ஆசியா, ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவை, தம்முடைய அழகான உடலசைவுகளுக்காகவும், மென்மை வழியும் கண்களுக்காகவும் சிறப்போடு குறிப்பிடப்படுகின்றன4 என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. கஜல் என்ற சொல்லுக்கு “வனப்பும், மென்னோக்குமுடைய சிறுமான் வகை; அரபிய நாட்டு மான்”5 என்று சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி எடுத்துக்காட்டுகிறது.

அகராதிப் பொருள்
அமெரிக்கானா பேரகராதியிலிருந்து, “கஜல் என்பது இஸ்லாமிய இலக்கிய வடிவம், பாடப்படும் கவிதைகளில் ஒரு வகையானவை, பொதுவாக அழகுணர்வோடும், சுருக்கமாகவும், சிறப்பாகக் காதல் குறித்துப் பாடப்படும் வடிவமாகும்”6 என்று அறிய முடிகிறது. பிரிட்டானிகா பேரகராதி, கஜல் என்பது காதலின் பரிமாணங்களைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் பாடல் வடிவமாகும் என்கிறது.

வழக்குப் பொருள்
எம்.ஆர்.எம். விளக்கியுரைக்கின்ற போது, “அரபிச் சொல்லான இதன் பொருள் பெண்களுடன் பேசுதல், காதல் மொழி பேசுதல் என்பதாகும். பிரிவாற்றாமை பற்றியும் காதலினால் எற்படும் விரக வேதனையைப் பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு வகைப் பாவினத்திற்கு இப்பெயர் கூறப்படுகின்றது”7 என்பார்.
இரா. முருகன் கூறுகையில், “பெண்ணிடம் பேசுவது என்ற பொருள் கொண்ட அந்தச் சொல் பெண்ணைப் பற்றி, காதல் பற்றி, பிரிவுத்துயர் பற்றி, அதை மறக்க மதுவில் மூழ்கும் சராசரி மனிதனை, சக்கரவர்த்தியைப் பற்றிய படைப்பாக நீட்சியடைகிறது”8 என்கிறார்.

கஸல்

கஸல்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்


கஸீதா 
கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர்இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது”1 என்பார் எம்.ஆர்.எம்.

கஸீதாவின் தன்மைகள்
கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்மைகள் குறித்து எம்.ஆர். எம். கூறுகையில், “ஒரு சம்பூரணமான கஸீதாவில் மூன்று தன்மைகள் அமைந்திருக்க வேண்டும். முதலில் கவிஞர் தம் அன்பிற்குரியாளின் இல்லத்திற்குச் செல்வதையும், அது வெறிச்சோடிக் கிடப்பதையும் விவரிக்க வேண்டும். இரண்டாவதாக, தாம் ஒருவரிடம் பரிசு நாடிச் செல்லும் போது வழியிலுள்ள பாலையின் வருணனைகளையும், அங்குத் தாம் அனுபவிக்கும் துன்பங்களையும் விவரிப்பதோடு, காட்டு விலங்குகளோடு தம்முடைய ஒட்டகத்தை ஒப்பிட்டு வருணிக்கவும் வேண்டும். மூன்றாவதாக, தாம் எவரை மனதில் கொண்டுள்ளோமோ அவரைப் புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பாவியற்ற வேண்டும். இதுவே கஸீதாவின் முக்கிய பகுதியாகும்”2 என்கிறார்.

அமைப்பு 
கஸீதாவின் அமைப்பு குறித்து மேலும், எம். ஆர். எம். கூறுகையில், கஸீதா முழுவதும் ஒரே சந்தத்தில் அமையப் பெற்றிருப்பதாலும் பாலை பற்றிய வருணனை திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக ஆனால், வெவ்வேறு சொற்களில் வருவதாலும் படிப்பவர்களை மட்டுமல்லாது இதனை எழுதும் கவிஞர்களையும் அலுப்படையச் செய்கிறது. எனவேதான் துல்ரும்மா என்ற கவிஞர் தம்முடைய பிரசித்தி பெற்ற கஸீதாவின் முதலடியை மட்டும் எழுதி, பின்னர் கருத்து வராததன் காரணமாக அத்துடன் அதனை வைத்தார் என்றும், நெடுங்காலம் சென்ற பின் அவர் இஸஃபஹான் சென்றிருந்த போது திடீரெனப் புதிய கருத்துத் தோன்றவே அக்கஸீதாவை எழுதி முடித்தார் என்றும் கூறப்படுகிறது. 

சில கவிஞர்கள் கஸீதா என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் கஸீதாவின் இலக்கணங்கள் அமையப் பெறவில்லை. மெய்ஞ்ஞானம் பற்றிய கஸீதாக்களும் அரபியில் இருக்கின்றன. ஒரு சூஃபி உறங்கும் போது, ‘மெய்ஞ்ஞானம் பற்றிக் கூறப்பட்டவைகளில் மோசூலிய கஸீதாவை விட மேலானது ஒன்றில்லை’ என்று கனவில் அசரீரியாக முழுங்குவதைச் செவியுற்றார் என்று கூறப்படுகிறது. இதனை எழுதியவர் மோசூலின் காஜியான அல்முர்த்தஜா என்பவராவார். அதில் ஒரு காதலன் தன் காதலியின் மீது கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானக் காதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது3 என்று கூறுகிறார்.
கஸீதாவின் தொடக்கத்தில் இருக்கும் பகுதிக்கு ‘தஸ்பீப்’ என்று பெயர். இந்த தஸ்பீப் பகுதியில் தான் கஜலுக்கான உணர்வுகள், தன்மைகள், நயங்கள் காணப்படும். நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிகளாகக் கஸீதா பாடப்பெற்றன.

கடவுள்:

கடவுள்:

வழிபாட்டிடம், வணிக இடமாகி விட்டது. நல்ல உள்ளம் படைத்தவர்களும் பொருளாசைக்கு அடிமைப்பட்டுப் பண்பு குன்றி விடுகின்றனர் என்பதை,
குருக்களாகி விட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டுநிறைய காணிக்கை (ப.27)
எனக் கடவுள்மேலிட்டுக் குறிப்பிடுகின்றார்.
குழந்தையுள்ளம்:
வெளியுலகிற்குச் சென்று விளையாட விரும்பும் குழந்தையை வீட்டில் அடைத்துப் பழைய கதைகளைத் திணித்தல் கூடாது. அனுபவமே தலைசிறந்த கல்வி. கதைகள் கட்டுச் சோறு போன்றன.
கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம் (ப.77)
என்னும் கவிதை இக்கருத்தை உணர்த்துகின்றது. சொல்புத்தி விடுத்துச் சுயபுத்தியுடன் வாழும் குழந்தையே சாதிக்கவல்லதாகும்.

உறவுகள்:

உறவுகள்:

இன்றைய வாழ்வில் உறவுகள், பணத்தையே குறியாகக் கொண்டுள்ளன. மனைவியின் எண்ணமும் அதுவாக இருப்பதே வியப்பு ; கசப்பான உண்மை.
வழியனுப்ப வந்த மனைவி
கண்ணீரோடு சொன்னாள்
பணம்அனுப்ப மறந்திடாதீங்க (ப.97)
என்பது அது சார்பான கவிதை.
அண்ணன் தம்பி உறவும்கூடப் பொருளாதாரத்தை மையமிட்ட நிலையில் ஐயப்பாட்டிற்கு உரியதே என்பதை,
அயர்ந்த தூக்கத்தில் அண்ணன்
தம்பிவைத்தான் தலைமாட்டில்
ஊதுவத்தி (ப.58)
என்னும் கவிதை உணர்த்தும். ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்னும் பழமொழிக் கருத்துடையது இது.

சென்ரியூ

சென்ரியூ

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் “ஒரு வண்டி சென்றியூ” என்ற நூலிலிருந்து சென்றியூ எனப்படும் நகைதுளிப்பாக்களுக்கான எடுத்துக் காட்டுகள் கீழே:- (நன்றி: சென்னை பல்கலைக் கழக பாடங்கள்)
அரசியல்:
அரசியல்வாதி ஆவதற்கென்று தனித்தகுதி தேவையில்லை. எப்படிப்பட்டவர்களும் அதில் சென்று
முன்னேறி விடலாம் என்பதை,
அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)
என்னும் கவிதையில் நையாண்டி செய்கிறார் கவிஞர்.
கட்சிகள்தோறும் காணப்படும் கூட்டங்கள், தானே திரண்டனவல்ல ; திரட்டப்பட்டனவேயாகும். இதனை,
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள் (ப.30)
என்னும் கவிதையில் பட்டவர்த்தனமாக்கியுள்ளார்.
‘மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள். பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெரு மக்களே, தாங்கள் கூடும் பொதுச்சபையில் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு என்னாவது?
சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில் (ப.31)
என்பது அதைச் சுட்டும் கவிதை.
பதவியிலிருக்கும்வரை அதிகார தோரணையில் தன் விருப்பப்படி நடப்பவராகவும் மக்களைப் பற்றிக்
கவலைப்படாதவராயும் இருப்பவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்.
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன் (ப-63)
என்னும் கவிதை அது பற்றியதாகும்.
அரசியல்வாதிகளாகிய கட்சித் தலைவர்கள் சுய நலவாதிகள் ;தொண்டர்கள் அப்பாவிகள் என்பதை,
கட்சி தொண்டர்களுக்கு
காசு குடும்பத்துக்கு
தலைவர் மரணமுறி (ப.92)
என்னும் கவிதை புலப்படுத்துகின்றது.

_____

உருவகம்:


பொருளும் உவமையும் வெவ்வேறு அல்ல என்பது உருவகம்.
(எ-கா):
இடியின் திட்டு
மின்னலின் பிரம்படி
அழுதது வானக்குழந்தை (பல்லவன்)
என்பதில் இடி திட்டாகவும், மின்னல் பிரம்படியாகவும், மழை அழுகையாகவும், மேகம் தண்டிக்கப்படும் குழந்தையாகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளன.
(எ-கா):
பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை (அறிவுமதி)
என்னும் கவிதையில் ஆலங்கட்டி மழை ஆசிரிய நிலையில் கருதப்பட்டுக் குட்டுவதாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

உவமை:

உவமை:

புதுப்புது உவமைகளைக் கையாளும் உத்தியையும் துளிப்பாவில் காண்கிறோம்.
(எ-கா):
கவிதைகள் எழுத
நல்ல தாள்
பனிப்புகை (மித்ரா)
என்பதில் பனிப்புகை வெண்தாளாக நிற உவமை ஆக்கப்பட்டுள்ளது.
(எ-கா):
நெருப்புதான் பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில் (அறிவுமதி)
என்னும் கவிதையில், மணமாகும்வரை கவனித்து வளர்க்க வேண்டியிருப்பதால் தாய்க்கு அடி வயிற்றில் கட்டிய நெருப்பாகவும், சமையல் அறையிலேயே இருத்தப்படுவதாலும்,வரதட்சணைக் கொடுமை காரணமாகச் சமையலறை அடுப்பு வெடித்து அழிய நேர்வதாலும் மாமியாருக்கு அடுப்படி
நெருப்பாகவும் அமைகிறாள் பெண்.

வினாவிடை:

வினாவிடை:

கவிதை முழுவதும் வினாவாக அமைந்து, தலைப்பு அதற்குரிய விடையாக அமைவதுண்டு. மூன்றாம் அடியே விடையாவதும் உண்டு.
(எ-கா):
வெட்ட வெட்ட
வளரும் நீ என்ன
விரல் நகமா? (பரிமள முத்து)
என்னும் கவிதைக்குரிய பதிலாகிய கவலை இதற்கான தலைப்பாக அமைகிறது.
(எ-கா):
தாகம் தணிக்குமோ
கடல்நீர்
வெட்டிப்பேச்சு (செந்தமிழினியன்)
என்பதில், மூன்றாமடி தணிக்காது எனப்பதில் தருவதோடு, வெட்டிப் பேச்சும் அத்தகையதே என்பதை இணைத்துணர்த்துகின்றது.

பழமொழி:

பழமொழி:
பழமொழிகளை நயமுறக் கையாண்டு கருத்தை விளக்குதலும் உண்டு.
(எ-கா):
கந்தலானாலும் கசக்கிக்கட்டு
கசக்கினான்
கிழிந்து போனது (மலர்வண்ணன்)
என்னும் கவிதையில் தூய்மைக்குச் சொல்லப்பட்ட பழமொழியை, வறுமையைச் சித்திரிக்க எடுத்துக் கொண்டுள்ளார் கவிஞர்.
(எ-கா):
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள் (பாட்டாளி)
என்பதில், ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ?’ எனப் பணிவுக்குக் கூறப்பட்ட பழமொழி இன்றைய கல்வி முறையை விமரிசிக்கக் கையாளப்பட்டுள்ளது.

அங்கதம்:

அங்கதம்:

சமூகக் கேடுகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நயம்பட எடுத்துரைத்துத் திருத்த முயல்வது அங்கதம் எனப்படும்.
(எ-கா):
எங்கள் மக்கள்
எப்போதும் நலமே தெருவுக்கு
நான்கு டாக்டர்கள் (பரிமள முத்து)
என்பதில் நலத்திற்குக் காரணம் நோய் வாராமை அன்று, நோய் நிலையாமையே எனக் கூறுவதாக அமைகின்றது.
(எ-கா):
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் (தங்கம் மூர்த்தி)
என்னும் கவிதை, கையூட்டு அரசு அலுவலகங்களில் அங்கிங்கெனாதபடி பரவி நிலை பெற்றிருப்பதைப் புலப்படுத்துகின்றது.

முரண்:

முரண்:

மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும். இது சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என வகைப்படுத்தப்படும்.

1. சொல் முரண்
தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி (ல.டில்லிபாபு)
என்பதில் தாழ்வு x உயர்வு எனச் சொல் முரண் அமைந்தது.

2. பொருள் முரண்
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன் (கழனியூரன்)
என்னும் கவிதையில் அன்புடைமைக்கு முரணாகத் தண்டனை எனும் பொருண்மை இணைத்துக் கூறப்படுகிறது.

3. சொற்பொருள் முரண்
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில் (பா.உதயகண்ணன்)
என்னும் கவிதையில், மௌனமும் கலவரமும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுகின்றன.

தொன்மம்:

தொன்மம்:
புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியோ, திரித்தோ, மறுத்தோ இக்கால நிலைக்கேற்ப குறியீடு ஆக்குதல் தொன்மப் படிமம் ஆகும்.
(எ-கா):
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள் (ராஜ.முருகுபாண்டியன்)
என்பது கௌதமரின் சாபத்தால் கல்லான அகலிகை இராமனின் கால்பட்டுச் சாபவிமோசனம் அடைந்து பெண்ணான நிகழ்வை அடியொற்றியது. பெண்ணாக இருப்பதினும் கல்லாக இருப்பதே பாதுகாப்பானது என்றால் இச்சமூகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.
(எ-கா):
ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி (அவைநாயகன்)
என்னும் கவிதை, மனுநீதிச் சோழனிடம் முறையிட்ட கன்றை இழந்த பசுவின் கதறலையும், அக்கதறல் கேட்டுத் தன் மகனையே கொன்று முறைசெய்த மன்னனின் நீதிமுறையையும் கொண்டு அமைக்கப் பட்டது. நீதிமன்றங்கள், தக்க தீர்ப்பு வழங்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும், முறையிட வந்தவர்களையே தண்டிப்பதுமாகிய நிலையில் இருக்கும் நாட்டு நடப்பினைப் புலப்படுத்துகின்றது.

குறியீடு:

குறியீடு:

செறிவான கவிதை வடிவத்திற்குக் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. ‘ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் (object), குறியீடு எனப்படுகிறது. ஒரு குறியீடு மற்றொன்றிற்குப் பதிலாக நிற்கலாம்; சுட்டிக் காட்டுவதோடு மட்டுமேகூட அமைந்து விடலாம். இயற்கை, சமயம், வாழ்க்கை என்பனவற்றைச் சுட்டுவனவாகவே அமைவதே பெரும்பான்மை எனலாம்.
(எ-கா):

1. இயற்கைக் குறியீடு
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் (அமுதபாரதி)

2. சமயக் குறியீடு
இதயத்தில் இறுக்கம்
இதழ்களில் மௌனம் இங்கே
சிலுவையில் நான் (பரிமள முத்து)

3.வாழ்க்கைக் குறியீடு
உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை (அறிவுமதி)

ஹைக்கூ என்கிற துளிப்பா-1

ஹைக்கூ என்கிற துளிப்பா-1

படிமம்:

துளிப்பாவில் பெரிதும் கையாளப் பெறுவது படிம உத்தியேயாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புல உணர்வுகளையும் அனுபவித்தவாறே வெளியிடுகின்ற உணர்ச்சி வெளிப்பாடே படிமம் எனப்படும். வருணனைத் திறன் மிக்கது இது.
(எ-கா):
1. கட்புலப் படிமம்

சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி (பரிமள முத்து)

2. விளையாட்டுப் படிமம்
பம்பரம் சுற்ற
நல்ல கயிறு
எறும்பின் பாதை (மித்ரா)

3. அச்சு வடிவக் காட்சிப் படிமம்
அதிக சுமையா?
மெ. .ல் . . .ல நகரும்
நத்தை (மு.முருகேஷ்)

ஹைக்கூ பற்றி மேலும்

ஹைக்கூ பற்றி மேலும்... நன்றி - இராஜ.தியாகராஜன் 

துளிப்பாக்களைப் பற்றிய விவரங்களைக் கண்டேன். முகநூலின் நான்கு கட்டுரைகளாக நான் எழுதிப் பகிர்ந்து கொண்ட குறிப்புகளை இங்கே பகிர்கிறேன்.
முன்னர் ஒரு முறை துளிப்பாக்களின் இலக்கண அமைப்பினைப் பற்றியொரு குறிப்பினை எழுத்தி இருந்தேன். அதன் பின்னர், பாவலர் திரு கரிசலார் அவர்களுடன், ஒருமுறை துளிப்பாக்கள், இயைதுளிப்பாக்கள், நகைதுளிப்பாக்கள், அவற்றின் அமைப்புகள், படிம உத்திகள் இவற்றை சில எடுத்துக் காட்டுகளுடன் மடலாடல்கள் செய்திருந்தேன்.
இவற்றை பல புத்தகங்களில் இருந்தும், இணையத்தில் சென்னை பல்கலை கழக பாடங்களில் இருந்தும் நான் அறிந்தேன். ஆனால் நான் அதிகம் இவ்வகைப் பாக்களை ஏனோ இயற்ற முற்படவில்லை! இதில் வரும் விவரங்கள் எல்லாமே நான் படித்து அறிந்தவையே! சென்னை பல்கலைக் கழக பாடத்திட்டத்திற்கு என் உளமார்ந்த நன்றி. துளிப்பாக்கள் வகையிலான கவிதை இயற்ற வேண்டும் என்று முனையும் அன்பர்களுக்கு இந்த கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்.
ஜப்பானிய இலக்கியத்தில் உருவான ஹைக்கூ, 5-7-5 என்ற அசையமைப்பு கொண்டு, ஜென்(Zen) குருமார் தத்துவத்தை பரப்புதற்கும், இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. இதுவல்லாது வேறு கருக்களைக் கொள்வது துளிப்பா ஆகாது என்பனர் பலர். தமிழிலக்கியத்தில் இவ்வடிவம் படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திகளில் அமைக்கப்படுவதோடு, சமூக விமர்சனத்திற்கும் சமுதாயக் கேடுகளைச் சாடுதற்கும் தமிழ்த் துளிப்பா அன்பர்கள் கைக் கொள்கின்றனர் எனலாம்.

லிமரைக்கூ

லிமரைக்கூ
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது. 

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது. 

ஹைக்கூ, லிமரிக் என்னும் இரண்டு வகைக் கவிதைகளின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டு தமிழில் கவிதைப் படைக்கத்தக்க திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் மொழியாளுமை - கவித்துவ இயக்கம் ஆகிய இரண்டிலும் தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.

5-7-5 என்னும் அசையமைப்பு அடிகளைக் கருத்தில் கொண்டால் ஹைக்கூவின் தன்மை அதுவென உணர்ந்து மூன்றடிகளின் இடையடி சற்றே - ஒரு சீர் அளவே மிக்கிருக்க எழுதலாம். முதல், கடை அடிகள் தவிர்த்த இடையடிகள் சீர் குறைந்து வரும் லிமரிக்கைக் கருத்தில் கொள்ளும் போது - லிமரைக்கூவிலும் நடுவடி சீர் குறைந்து வரலாம் (இது சிறுபான்மை). மூவசைச் சீர்களைப் பயன்படுத்தும் போது அவை ஈரசைகளாகப் பிரிக்கத்தக்கதாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.

எடுத்துக்காட்டாக, ‘வந்ததற்காய்’ என்னும் மூவசைச் சீர், ‘வந்த + தற்காய்’ என இரண்டு சீராகப் பிரியும் வாய்ப்புள்ளதாகவும், ‘வந்ததனால்’ என்பது, ‘வந்த + தனால்’ எனப் பிரிவும் போது அவ்வாய்ப்பைப் பெறாததாகவும் அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

3 அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ.

தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ.

ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்
-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ. 

குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்

பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
- ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்

எதிரெதிர் தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்

வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
- கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி

மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்

வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
- ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்

இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!

கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு

கவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.

இன்று தமிழில் இவ்வகை வடிவங்களைத் தவிர ஹைபுன், லிபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் எனப் பல வடிவங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன. 
காண்க : www.rameshpoet.blogspot.com