இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 டிசம்பர், 2013

என் கண் மூடும் வரை ....!!!

இறைவனை வணங்குவது 
போல் காதலை வணங்கினேன் 
அவனிடன் இருந்துதானே 
காதல் பிறந்தது ....!!!

வாடி விழும் பூவை 
போல் ஆக்கிவிட்டாய் 
காதலை -என்றாலும் 
என்னில் தளிர் இருக்கிறது ...!!!

நீ கண் சிமிட்டும் 
ஒவ்வொரு நொடியும் 
எனக்கு இதய வலிதான்
என் கண் மூடும் வரை ....!!!

கஸல் 611

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக