இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 அக்டோபர், 2013

உன் உயிரை நீ கேட்டாலும்

என்னவள் ....!!!
காதலை 
நிச்சயம் ஏற்பாள் -அவளை 
உயிராய் காதலிக்கிறேன் 
உயிரின் உன்னதத்தை 
உணராதவள் பெண் அல்ல ..!!!

உயிரை  தந்தவள் தாய் 
உயிராக மாறுபவள் தான் காதலி 
உயிரின் உன்னதத்தை உணராதவள் 
பெண்ணல்ல ...!!!

அவள் அழுதாள் என்கண் 
கலங்குகிறது 
அவள் சிரித்தாள் என் உதடு 
விரிகிறது -அவள் 
உயிர் என்னிடம் 
இருப்பதால் ....!!!

உயிராக உன்னுடன் 
வாழ்கிறேன் -அங்கு 
எப்படி நான் வாழ்ந்தாலும் 
கவலையில்லை ....!!!

உயிரே  என்று நீ 
அழைக்கும் நாள் 
வெகு தூரத்தில் இல்லை 
உன் உயிரை நீ கேட்டாலும் 
நான் தரப்போவதில்லை ...!!!