இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

சுக்கு நூறாகிறது இதயம் ...!!!

ஒவ்வொருமுறையும் 
நீ என்னை பார்க்கும் போது 
கோவிலில்..... 
அடிக்கும் சிதறு தேங்காய் 
போல் சுக்கு நூறாகிறது இதயம் ...!!! 

ஒவ்வொரு முறையும் 
நீ என்னை கடக்கும் போது 
உன் அதிர்வை .... 
மின்னல் தாக்க இடிதாங்கி 
போல் ஆகிவிடுகிறது இதயம் ...!!! 

காதலாகி கசிந்து கண்ணீர் மல்க 
நிற்கிறேன் -நீயோ 
மௌன மொழியில் காதல் 
கீதம் பாடுகிறாய் - உன் 
இன்பராகம் என்னை 
மெய்சிலுக்க வைக்கிறது ...!!!