இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 செப்டம்பர், 2013

உன் மனதை ... கிழித்துப்பார்க்க ஆசை ...

சிற்பங்களை
வடிக்கும் சிற்பியே ...
உன் மனதை ...
கிழித்துப்பார்க்க ஆசை ...
பொன்முட்டையிடும்
வாத்து கதைபோல் ..
ஆகிவிடும் என் ஆசை ....!!!

எத்தனை எத்தனை
கற்பனைகள் ...
எத்தனை எத்தனை
நலினங்கள் ...
அத்தனையும் - உன் .
மனதில் வித்தையாய்
வடிக்கிறாய் -சிற்பியே ....!!!

நீ இல்லாத இடமேது ...?
கடவுளை கண்டேன் - உன்
கைவண்ணத்தில்
கடந்துசெல்லும் படியிலும்கண்டேன்
உன் கைவண்ணத்தை ...!!!.
தூக்கி செல்லும் வாகனத்தில் கண்டேன்
உன் கற்பனையை ....!!!

செதுக்குவது கல் அல்ல ...
நானும் நீயும் விரும்பும் உயிர் ...!!!
நீ
செதுக்கும் போது வருவது....
ஓசையல்ல...
உயிருக்கு உடல் ...!!!

(இந்த கவிதையை சிற்பாச்சாரியார்களுக்கு சமர்ப்பணம் )