இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 செப்டம்பர், 2013

மாயவனே உன்னை மனதுக்குள்

நடை பாதையில் மலர்கள்
மலர்வதே இல்லை
மன்னவனே....!!!
நீ பார்த்த பார்வையில்
பாதையிலேயேமலர்ந்து
விட்டேன் ....!!!
இனிமையாக பலர் பேசினார்
அத்தனையும் கசத்தது
எதற்காக ...? -உன்
பேச்சே முதல் முதலில்
இனிமையாக இருக்க வேண்டும்
என்பதால் தானோ ....!!!
மாயவனே உன்னை மனதுக்குள்
மணவாளனாக்கி விட்டேன் ...!!!!
மனக்கோட்டையை
மண்கோட்டையாக்கிடாமல் வந்து விடு ...!!!