இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஆகஸ்ட், 2013

ஆகஸ்து 04 ம் திகதி ....!!!

அறிமுகம் இல்லாமல்...
பயணத்தில் இணைந்து.... 
கொண்டோம்.... 
பேசும் போது நீங்கள் 
என்று சொன்னேன் -இதுஎன்ன ..?
நட்புக்கே பொருந்தாத.....
சொல் என்றாய் ...!!!

நட்பென்றால்- நீ -என்று சொல்...!!!
அதுதான் உரிமை சொல்...!!!
உரிமையுடன் அதட்டினாய்...!!!
அடிக்கடி பேசி கொண்டோம் 
நான் உன் உறவுவையும் -நீ 
என் உறவையும் .....
பரிமாறிக்கொண்டோம்.... 
உயிர் ஆனோம் .....!!! 

காலங்கள் கடந்து சென்றாலும் 
இன்று வரை தொடருகிறது 
நம் உறவு....!!!
நண்பா ஒன்று நினைவிருக்கிறதா ...?
நானும் நீயும் சந்தித்த நாள் ...
ஆகஸ்து 04 ம் திகதி ....!!!