இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

பிறிதுமொழிதல்

பிறிதுமொழிதல்

மரபுக்கவிதை 

சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், வேறொரு கருத்தைக் கொண்டு பெறவைத்தல் பிறிதுமொழிதல் எனப்படும். 
பீலிபெய் சாகாடும் அச்சிறும் ; அப்பண்டம் 
சால மிகுத்துப் பெயின்
என்னும் திருக்குறளில் பிறிதுமொழிதல் இடம்பெற்றுள்ளது. குறளின் பொருள், 'மிக மென்மையானவையே ஆயினும் மயிலிறகுகளை அளவுக்கதிகமாய் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பதாகும். எளியவர்களே யாயினும் பல பகைவர்கள் ஏற்பட்டால், ஆற்றல் படைத்த ஒருவரும் அவர்களால் தோல்வியுற நேரலாம்’ என்னும் கருத்தை விளக்க வந்தது இக்குறட்பா.

புதுக்கவிதை

புதுக்கவிதையில் ‘குறியீடு’ எனக் குறிக்கப் பெறுவது இது எனலாம். குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். காட்டப்படும் பொருள் ஒன்றாகவும், உணர்த்தப்படும் பொருள் ஒன்றாகவும் அமைந்து மறைமுகமாகப் படைப்பாளர், வாசகருக்கு உணர்த்த விரும்பிய பொருளினை உணர்த்தவல்லது குறியீடு. 
அஞ்சு விரலும் 
ஒன்றுபோலிராது 
என்பது உண்மைதான் 
அதற்காக நடுவிரல் மட்டும் 
நாலடி வளர்ந்தால் 
நறுக்காமலிருக்க முடியுமா?
என்னும் மு.கு ஜகந்நாத ராஜாவின் கவிதையில், நடுவிரல்- களையப்பட வேண்டிய தீமையைச் சுட்டி நிற்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக