இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2013

உயிர் கொண்டு எழுதுகிறேன் ..

உயிர் கொண்டு எழுதுகிறேன் ..
உயிர் துடிப்பாய் அமைகிறது கவிதை ..

நான் இன்பமாக இருக்கும் போது ..
நாடி நரம்பை வரிகளாக்கி எழுதுகிறேன்

நான்  துன்ப படும் போது ...
நாள நரம்பை வரிகளாக்கி எழுதுகிறேன்

நிகழ்கால நினைவுகளை ..
இதயத்தின் ஓசைகொண்டு ..
எழுதுகிறேன்

கடந்த கால நொடிகளை ..
நின்ற மூச்சின் துளிகளை
கொண்டு எழுதுகிறேன்

நான் இறக்கும்  வரை
கவிதை எழுதுவேன்
நான் இறந்தபின்னும்
கவிதை எழுதுவான்
என் நண்பன் ...!!!

கவிஞனுக்குத்தான் இறப்பு உண்டு ..!!!
கவிதைக்கு இல்லையே ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக