இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

உறவுகள்:

உறவுகள்:

இன்றைய வாழ்வில் உறவுகள், பணத்தையே குறியாகக் கொண்டுள்ளன. மனைவியின் எண்ணமும் அதுவாக இருப்பதே வியப்பு ; கசப்பான உண்மை.
வழியனுப்ப வந்த மனைவி
கண்ணீரோடு சொன்னாள்
பணம்அனுப்ப மறந்திடாதீங்க (ப.97)
என்பது அது சார்பான கவிதை.
அண்ணன் தம்பி உறவும்கூடப் பொருளாதாரத்தை மையமிட்ட நிலையில் ஐயப்பாட்டிற்கு உரியதே என்பதை,
அயர்ந்த தூக்கத்தில் அண்ணன்
தம்பிவைத்தான் தலைமாட்டில்
ஊதுவத்தி (ப.58)
என்னும் கவிதை உணர்த்தும். ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்னும் பழமொழிக் கருத்துடையது இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக