இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஜூலை, 2013

தந்திக்கு வந்த தந்தி ...!!!

என் பூட்டனார் காலத்திற்கு 
முன்னிருந்து ...
மங்களத்துக்கும் தந்தி ...!!!
அமங்களத்துக்கும் தந்தி ...!!!
அமர்க்களத்துக்கும் தந்தி ...!!!

வந்த செய்தி என்னவென்று ...
பிரித்து பார்ப்பதற்கு முன் ..
பாட்டி ஒருபக்கம் ஓலமிடும் ...!!!
அம்மா ஒருபக்கம் ...
தலை தலையாக அடிக்கும் ...!!!
ஏன் கத்துறியல் என்று என் பாட்டன் ...
ஒருபுறம் கத்தும் ....!!!

பிரித்த செய்தி மங்களம் ...
நான் வீட்டுக்கு வருகிறேன் ..
அம்மா என்று மூத்த மகனின் ..
தூரத்து செய்தி அது ....!!!

இத்தனை இத்தனை ..
சம்பவங்கள் இப்போதும் ..
நெஞ்சில் ஓடும் ...
தந்திக்காறன் கடவுளாயும்...
யமனாகவும் தெரிவார் ...!!!

இன்று தந்தி இறந்துவிட்டதாக ...
செய்தி கேட்டேன் ...!!!
ஈ மெயுலுடன் ஏற்பட்ட சண்டையால் ..
தந்தி இறந்ததாக வந்த செய்தி ...!!!
பூட்டன் காலத்தையே சாக்கொண்டு விட்டது ...!!!

தந்தியின் மரண வீட்டுக்கு வந்தவர்கள் ...
புலம்பினார்கள் ...
உலகமயம் இன்னும் எத்தனையை ...
கொல்லப்போகிறதோ...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக