இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

உத்திகள்

உத்திகள்

கொள்வோன் கொள்வகை அறிந்து, சொல்ல வரும் கருத்தையும் படைப்போன் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு பாடலியற்றும் முறைகளே உத்திகள் எனப்படும்.
மரபுக்கவிதைகளில் காலங்காலமாகப் பொருள்கோள் முறையும், அணியிலக்கணங்களும் சிறந்த உத்திகளாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன.
புதுக்கவிதைகளில் பொருள்கோள் வகைகள் இடம் பெறுவதில்லை. அணியிலக்கணக் கூறுகள் பலவற்றைக் காண முடிகின்றது. பொருளை நேரடியாக அணுகுதல், தேவையற்ற ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் இருத்தல், கடினமான யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின் எளிமையைப் பின்பற்றுதல் ஆகியன புதுக்கவிதைக்கான சிறந்த உத்திகள் என்பர்.
இருவகைக் கவிதைகளையும் ஒப்பிடும் நிலையில் உவமை, உருவகம், முரண், அங்கதம், சிலேடை, பிறிதுமொழிதல், தற்குறிப்பேற்றம், தொன்மம், உரையாடற்பாங்கு, இருண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இங்குச் சிந்திப்போம்.

nanri kaviaruvi ramesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக