இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 ஜூன், 2013

நாளை படப்போகும் ..!!!  

இறப்பு ஒரு கொடுமைதான் 
ஆனால் இறக்காமல் -உலகில் 
யாரிப்பர் ....??? 

இறப்பின் போது அழுவது 
இயற்கைதான் -ஆனால் 
அழுததால் மீண்டவர் யார் ...??? 

இறந்தவரை நினைப்பது 
கவலைதான் -ஆனால் 
நினைத்ததால் -மீண்டும் 
சிரித்தவர் உண்டோ ...??? 

பட்டுப்போன மரத்தை 
நாளை படப்போகும் 
மரங்கள் தூக்குவதே -பாடை 

செத்துப்போன உடலுக்கு 
நாளை சாகப்போகும் -உடல் 
போடுவதே -கூச்சல் 
பட்டினத்தார் ஒன்றும் 
சும்மா கூச்சலிடவில்லை 
மனிதா ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக